'கொட்டுக்காளி' விருதுக்காக எடுக்கப்பட்ட படமா? - இயக்குனர் விளக்கம் | குழந்தை நட்சத்திரங்கள் வளர காத்திருந்தது ஏன்? - ஹலிதா ஷமீம் விளக்கம் | இரண்டே மாதத்தில் முடிந்த ரியோ படம் | அடுத்த வாரம் 7 படங்கள் ரிலீஸ் | தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் |
கடந்த வருடம் மாமன்னன் படத்தின் மூலம் தனது வில்லத்தனம் கலந்த நடிப்பால் ரசிகர்களிடம் இன்னும் நெருக்கமானார் நடிகர் பஹத் பாசில். இந்த வருடம் மலையாளத்தில் அவர் நடித்துள்ள ஆவேசம் என்கிற திரைப்படம் வரும் ஏப்ரல் 11ம் தேதி வெளியாக இருக்கிறது. இன்னொரு பக்கம் தெலுங்கில் ஏற்கனவே அவர் வில்லனாக என்ட்ரி கொடுத்து அதிரவைத்த புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் இன்னும் சில மாதங்களில் வெளியாகிறது. அது மட்டுமல்ல ரஜினிகாந்தின் வேட்டையன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பஹத் பாசில்.
இதைத்தொடர்ந்து கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‛ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' படத்தின் இயக்குனர் விபின் தாஸ் இயக்க உள்ள புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் பஹத் பாசில். மேலும் இந்த படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் எஸ்.ஜே சூர்யாவும் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. சமீபத்தில் ஐதராபாத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று அவரிடம் கதையை கூறி வந்துள்ளாராம் இயக்குனர் விபின் தாஸ்.
அந்த வகையில் மலையாளத்தில் இந்த படத்தின் மூலம் எஸ்ஜே சூர்யா அடியெடுத்து வைப்பார் என எதிர்பார்க்கலாம். ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பிரித்விராஜ் மற்றும் மின்னல் முரளி இயக்குனர் பஷில் ஜோசப் இருவரையும் வைத்து குருவாயூர் அம்பல நடையில் என்கிற படத்தை இயக்கி முடித்து விட்ட விபின் தாஸ், அடுத்ததாக பஹத் பாசில் பட வேலைகளை துவங்க இருக்கிறாராம்.