மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் |
கடந்த 2015ல் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் 'இன்று நேற்று நாளை' இதில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தமிழ் சினிமாவில் வெளிவந்த மிக முக்கியமான டைம் டிராவல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களாக இன்று நேற்று நாளை 2ம் பாகம் உருவாகிறது என தகவல் பரவி வந்தது. இப்போது இன்று நேற்று நாளை 2ம் பாகம் உருவாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆனால், இந்த பாகத்தை ரவிக்குமார் இயக்கவில்லை அவரின் கதையை பரத் மோகன் இயக்குகிறார். சிவி குமாரிடம் 'மாயவன்' திரைப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய இவர், 'இக்லூ' மற்றும் 'இப்படிக்கு காதல்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும், இந்த பாகத்தில் கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடிக்கவில்லை. விரைவில் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.
தங்கம் சினிமாஸ் எஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி வி குமார் தயாரிப்பில் உருவாகவுள்ள 'இன்று நேற்று நாளை 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது.