பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி | தந்தை நடிகரின் மிரட்டலால் ஓட்டம் பிடித்த நடிகை |

கடந்த 2015ல் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் 'இன்று நேற்று நாளை' இதில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தமிழ் சினிமாவில் வெளிவந்த மிக முக்கியமான டைம் டிராவல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களாக இன்று நேற்று நாளை 2ம் பாகம் உருவாகிறது என தகவல் பரவி வந்தது. இப்போது இன்று நேற்று நாளை 2ம் பாகம் உருவாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆனால், இந்த பாகத்தை ரவிக்குமார் இயக்கவில்லை அவரின் கதையை பரத் மோகன் இயக்குகிறார். சிவி குமாரிடம் 'மாயவன்' திரைப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய இவர், 'இக்லூ' மற்றும் 'இப்படிக்கு காதல்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும், இந்த பாகத்தில் கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடிக்கவில்லை. விரைவில் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.
தங்கம் சினிமாஸ் எஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி வி குமார் தயாரிப்பில் உருவாகவுள்ள 'இன்று நேற்று நாளை 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது.