ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் உள்ளடக்கிய உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் பெண்களை அதிக அளவில் பங்கு பெற வைக்க வேண்டும் என்பது குறித்த கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, ‛‛பெண்களிடம் பெரிய அளவில் சக்தி உள்ளது. ஐந்து ஆண்கள் செய்யக்கூடிய வேலையை ஒரு பெண்ணால் செய்ய முடியும். குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் முதலில் நிலவில் கால் வைத்தாலும் அவரை அங்கு கொண்டு சேர்த்தது ஒரு பெண்தான். அக்னி மிஸைல் முதல் இஸ்ரோ வரை பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது.
குறிப்பாக என்னை சுற்றி இருக்கும் பெண்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். பெண்களால் முடியாதது எதுவுமில்லை. என்றாலும் பெண்கள் அங்கீகாரம் பெறுவதற்கு ஆண்களைவிட 50 சதவீதம் அதிகமாக உழைக்க வேண்டி உள்ளது. பெண்களை இன்னும் மேலே கொண்டு வருவதற்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்'' என்று பேசி இருக்கிறார் சூர்யா.




