சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. கடந்த வருடம் அவர் நடித்து ஒரு படம் கூட வெளியாகவில்லை. இந்த வருடம் 'கங்குவா' படம் வெளியாக உள்ளது. பிரம்மாண்டப் படைப்பாக உருவாகி வரும் இந்தப் படத்தை அடுத்து சூர்யா நடிக்கும் படம் பற்றிய சில அறிவிப்புகள் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
'கங்குவா' படத்திற்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் 'புறநானூறு' படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு நிறைய நாட்கள் தேவைப்படுகிறது. எனவே, படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது.
இது குறித்த அறிவிப்பு மார்ச் 18ம் தேதி வந்தது. அடுத்த பத்து நாட்களில் மார்ச் 28ம் தேதி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது.
ஏற்கெனவே, அறிவிக்கப்பட்ட வெற்றிமாறன் இயக்க வேண்டிய 'வாடிவாசல்' படம் எப்போது ஆரம்பமாகும் என்பது குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக 'துருவ நட்சத்திரம்' படம் ஆரம்பமாகி பின் கைவிடப்பட்டது. அதற்கடுத்து ஹரி இயக்கத்தில் 'அருவா' படத்தின் அறிவிப்பு வெளியாகி அதுவும் டிராப் ஆனது. பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க 'வணங்கான்' படப்பிடிப்பு ஆரம்பமாகி நின்று போனது.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 'வாடிவாசல், புறநானூறு' தள்ளிப் போக உள்ள நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ள படம்தான் அடுத்து ஆரம்பமாக உள்ளது.
கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே சூர்யா நடிக்கும் படங்களில் எதற்காக இப்படி ஒரு குழப்பம் என அவரது ரசிகர்களே நொந்து போய் உள்ளார்கள்.