நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் ஆதி, நிக்கிகல்ராணி, முனிஸ்காந்த், ஆனந்த் ராஜ் நடிப்பில், 2017ம் ஆண்டு வெளியான மரகதநாணயம் படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் வெற்றி பெற்றது. அதன் அடுத்த பாகத்தை எடுக்க பல ஆண்டுகளாக முயற்சித்து வந்தார் இயக்குனர். படத்தை தயாரித்த ஆக்சிஸ் நிறுவன அதிபர் மறைந்ததால் முயற்சிகள் தடைப்பட்டன.
இந்நிலையில், ஆக் சிஸ் நிறுவனமும், பேஷன் ஸ்டூடியோவும் இணைந்து மரகதநாணயம் 2வை தயாரிக்க முன் வந்தன. அந்த படத்தின் பூஜை நடந்துள்ளது. நடிகர்கள் கார்த்தி, ஆர்யா, இயக்குனர் வெங்கட்பிரபு ஆகியோர் பூஜைக்கு வந்து வாழ்த்தியுள்ளன. இரண்டாம் பாகத்தில் புதிதாக பிரியா பவானி சங்கர் இணைந்துள்ளார். முதல் பாகம் போலவே பக்கா காமெடியுடன் பேண்டஸி படமாக தயாராகி உள்ளதாம். இந்த படத்தில் நடித்த ஆதியும், நிக்கியும் பின்னர் நிஜ வாழ்க்கையில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.