மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் | கதை நாயகன் ஆன இயக்குனர் ஜெகன் | கராத்தே ஹுசைனிக்கு தமிழக அரசு 5 லட்சம் உதவி | பிளாஷ்பேக்: மோசமான தோல்வியை சந்தித்த ரஜினி படம் | பிளாஷ்பேக் : கிருஷ்ணராக நடித்த நடிகை | நடிகர் விஸ்வக் சென் வீட்டில் வைர நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் திருட்டு | 'கூலி' படப்பிடிப்பு நிறைவு | கவுரி கிஷன் நடித்த வெப் சீரிஸிற்கு கீர்த்தி சுரேஷ் பாராட்டு | ராஜமவுலி படங்களுக்கு வசனம் எழுதிய பிரபல மலையாள பாடலாசிரியர் மரணம் |
'தில் ராஜு' என்றால் தெலுங்கு ரசிகர்களுக்குத் தெரியும், 'வாரிசு' ராஜு என்றால்தான் தமிழ் ரசிகர்களுக்கத் தெரியும். விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்த 'வாரிசு' படம் மூலம் தமிழ் சினிமாவிலும் நுழைந்தவர் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு.
அவரது தயாரிப்பில் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் மற்றும் பலர் நடிக்கும் 'பேமிலி ஸ்டார்' படம் இந்த வாரம் ஏப்ரல் 5ம் தேதி தெலுங்கு, தமிழில் வெளியாகிறது. இப்படத்தின் தெலுங்கு பத்திரியைளர் சந்திப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது.
அப்போது பேசிய தில் ராஜு, “நாங்கள் தயாரித்த 'கெரிந்தா' படத்தின் ஆடிஷனில் விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டார். ஆனால், அப்போது அவர் நிராகரிக்கப்பட்டார் என்பது எனக்குத் தெரியவில்லை. 'பெல்லி சூப்புலு' படத்திற்குப் பிறகு அந்த சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார்,” என்றார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய விஜய் தேவரகொண்டா, “அந்த சமயத்தில் எனக்கும் ஒரு நாள் வரும், நான் யார் என்பதை அப்போது இவர்களுக்குக் காட்டுவேன் என்று நினைத்தேன். இன்று தில் ராஜு படத்தின் கதாநாயகன் நான். நாளை நான் வெற்றி பெற்றால் பலரும் நிம்மதியாக இருப்பார்கள்,” என்றார்.
அதற்கு தில் ராஜு, “நீங்கள் காயப்பட்டால்தான், அதை சவாலாக எடுத்துக் கொள்ள முடியும். நீங்கள் மேலும் உழைப்பீர்கள், வெற்றி உங்களைத் தொடரும். அப்படி எனது வாழ்க்கையில் நானும் பல விதங்களில் காயப்பட்டுள்ளேன். காயப்பட்டால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்,” என்று விளக்கம் கொடுத்தார்.