'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? | ரஜினியுடன் நடிக்கும்போது இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டி இருந்தது ; நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு | விஜய்சேதுபதி குறித்து சிலாகிக்கும் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன் | பிளாஷ்பேக்: “அரசகட்டளை” என பெயர் மாற்றமான எம் ஜி ஆரின் “பவானி” | இதயக்கனி, முத்து, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் | எனக்கு நட்டம் தான், துரந்தர் 2 படத்தில் நடிக்காதது குறித்து அனில் கபூர் விளக்கம் | நான் தயாரித்த படங்களால் நஷ்டம் : முதல் முறையாக மனம் திறந்த விஜய்சேதுபதி |

'தில் ராஜு' என்றால் தெலுங்கு ரசிகர்களுக்குத் தெரியும், 'வாரிசு' ராஜு என்றால்தான் தமிழ் ரசிகர்களுக்கத் தெரியும். விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்த 'வாரிசு' படம் மூலம் தமிழ் சினிமாவிலும் நுழைந்தவர் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு.
அவரது தயாரிப்பில் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் மற்றும் பலர் நடிக்கும் 'பேமிலி ஸ்டார்' படம் இந்த வாரம் ஏப்ரல் 5ம் தேதி தெலுங்கு, தமிழில் வெளியாகிறது. இப்படத்தின் தெலுங்கு பத்திரியைளர் சந்திப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது.
அப்போது பேசிய தில் ராஜு, “நாங்கள் தயாரித்த 'கெரிந்தா' படத்தின் ஆடிஷனில் விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டார். ஆனால், அப்போது அவர் நிராகரிக்கப்பட்டார் என்பது எனக்குத் தெரியவில்லை. 'பெல்லி சூப்புலு' படத்திற்குப் பிறகு அந்த சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார்,” என்றார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய விஜய் தேவரகொண்டா, “அந்த சமயத்தில் எனக்கும் ஒரு நாள் வரும், நான் யார் என்பதை அப்போது இவர்களுக்குக் காட்டுவேன் என்று நினைத்தேன். இன்று தில் ராஜு படத்தின் கதாநாயகன் நான். நாளை நான் வெற்றி பெற்றால் பலரும் நிம்மதியாக இருப்பார்கள்,” என்றார்.
அதற்கு தில் ராஜு, “நீங்கள் காயப்பட்டால்தான், அதை சவாலாக எடுத்துக் கொள்ள முடியும். நீங்கள் மேலும் உழைப்பீர்கள், வெற்றி உங்களைத் தொடரும். அப்படி எனது வாழ்க்கையில் நானும் பல விதங்களில் காயப்பட்டுள்ளேன். காயப்பட்டால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்,” என்று விளக்கம் கொடுத்தார்.




