பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் | ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு | அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் |

நடிகர் விஜய்க்கு முதலில் பெரிய வெற்றி கொடுத்த படம் விக்ரமன் இயக்கிய ‛பூவே உனக்காக'. அந்த படத்தின் மூலம் அவருக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. அந்த படத்தில் முதலில் நடிக்க வேண்டியவர் பிரசாந்த் என்கிறார் விஜயின் முன்னாள் மானேஜர் பி.டி.செல்வகுமார்.
அவர் கூறுகையில், ‛‛அந்த கதையை கேள்விப்பட்டு நான் தான் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் விக்ரமனை அழைத்து சென்றேன். அதை விஜய் மறந்துவிட்டார். இப்போது அவருடன் வலுவானவர்கள், நல்லவர்கள் இல்லை. விஜயை வைத்து புலி படத்தை தயாரித்தேன். என்னுடன் இருந்தவர்களே போட்டு கொடுத்து என் மீது வருமான வரித்துறை ரெய்டு வர வழைத்தார்கள். ரிலீசுக்கு முதல் நாள் அந்த ரெய்டு வந்தது. அதனால் நிறைய பாதிக்கப்பட்டேன். விஜயிடம் பல ஆண்டுகள் உதவியாளர் ஆக இருந்தவர் செல்வம். இப்போது அவர் குடும்பம் கஷ்டப்படுகிறது. அவரும் ஆபரேசன் செய்துள்ளார். விஜயிடம் நேரில் கேட்டும் உதவிகள் கிடைக்கவில்லை. என் சார்பில் அவருக்கு 50 ஆயிரம் வழங்கி உள்ளேன்'' என்று கூறியுள்ளார்.