உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் |
விஜய்சேதுபதி நடித்துள்ள முதல் போலீஸ் படம் 'சேதுபதி'. மதுரையில் வாழும் கண்டிப்பான போலீஸ் அதிகாரி. அவரது மனைவியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இருவரும் இரண்டு குழந்தையின் தாய் தந்தையாக நடித்துள்ளனர். எழுத்தாளர் வேல ராமமூர்த்தி விஜய் சேதுபதிக்கு குடைச்சல் கொடுக்கும் வில்லனாக நடித்துள்ளார். பண்ணையாரும் பத்மினி படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கி உள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
"இது வழக்கமான போலீஸ் கதை இல்லை. பன்ஞ் டயலாக் இல்லை, துரத்தல் இல்லை, என்கவுண்டர் இல்லை. குடும்பத்தை நேசிக்கும் ஒரு மனிதன் போலீஸ் அதிகாரியாக இருந்தால் அந்த குடும்பம் எப்படி இருக்கும் என்பதுதான் கதை. வீட்டுக்குள் அன்பான கணவன், தந்தை.
யூனிபார்மை மாட்டிவிட்டால் நேர்மையான டெரர் போலீஸ் அதிகாரி. இந்த இரண்டுக்கும் இடையிலான உணர்வு பரிமாற்றங்கள்தான் கதை. ரம்யா நம்பீசனிடம் இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்ற சொன்ன உடனேயே விஜய்சேதுபதி நடிக்கிறார் என்றால் அந்த கதை அழுத்தமாக இருக்கும். நம்பி நடிக்கலாம் என்று சொல்லி நடித்தார். இது இதுவரை பார்த்த் போலீஸ் படங்களிலிருந்து மாறுபட்டதாக இருக்கும். ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்து விட்டோம். தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருகிறது" என்கிறார் இயக்குனர் அருண்குமார்.