கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் | தக்லைப் படத்திலிருந்து மீண்டும் விலகினாரா ஜெயம் ரவி? | மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‛பைசன் காளமாடன்' | மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | கடலை சுத்தம் செய்ய கிளம்பிய ரெஜினா | யுனிசெப் தூதராக கரீனா கபூர் நியமனம் | பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் | ஐஸ்வர்யா லட்சுமி தோழிதான், காதலி இல்லை : அர்ஜூன் தாஸ் விளக்கம் | புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! |
அரண்மனை-2 படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். சுந்தர்.சி இயக்கத்தில், வினய், ஆன்ட்ரியா, லட்சுமி ராய் ஆகியோரது நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் த்ரில்லர் படம் அரண்மனை. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர்.சி, அரண்மனை இரண்டாம் பாகத்தை ஆரம்பித்தார். சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பஜ்வா, சூரி, கோவை சரளா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக த்ரிஷா கூறியுள்ளார்.
இதுப்பற்றி த்ரிஷா மேலும் கூறியிருப்பதாவது... அரண்மனை-2 ஷூட்டிங் முடிந்துள்ளது. ஆனால் படத்தை பார்க்க பொங்கல் வரை என்னால் காத்திருக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
அரண்மனை-2 படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட உள்ளது. இப்படம் பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது.