பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அப்போஸ்தல பல்கலைகழத்தின் சென்னை கிளை கல்வி, கலாச்சாரம், இயற்கை வளம், சமூக மேம்பாடு, எழுத்துப் பணியில் சிறந்து விளங்குவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு எழுத்துப் பணிக்காக திரைப்பட பாடலாசிரியர்கள் ப்ரியன், அண்ணாமலை ஆகியோருக்கு டாக்டர் பட்டங்களை வழங்கிறது. சென்னை நுங்கம்பாக்கத்தல் உள்ள ஓட்டல் ஒன்றில் நடந்த பட்டமளிப்பு விழாவில் வி.ஜி.சந்தோஷம் தலைமையில் நீதிபதி டாக்டர் கே.ஞானப்பிரகாசம் முன்னிலையில் பேராயர் கார்டினால் டாக்டர் எஸ்.எம்.ஜெயக்குமார் இருவருக்-கும் டாக்டர் பட்டத்தை வழங்கினார்.
விழாவில் டாக்டர் பட்டம் பெற்ற ப்ரியன் பேசும்போது, " நான் சினிமா ஆர்வத்தில் திருச்சியிலிருந்து சென்னை வந்தேன் வந்த எனக்கு சென்னையே புதிது. சினிமா புரியவில்லை, பாட்டு எழுத யாரைப் பார்ப்பது, என்ன செய்வது என்று தெரியவில்லை. கதவு தட்டிய இடங்களில் எல்லாம் புறக்கணிப்புகள், நிராகரிப்புகள் ,அவமானங்கள் தான் பரிசாகக் கிடைத்தன. உதவி செய்ய ஒருவருமில்லை இதனால் பல நாட்கள் வீணாயின .எனக்கு நம்பிக்கை இருந்தாலும் குடும்பத்திலும் மகன் வீணாகி விட்டானே என்று வருத்தப் பட்டனர். அப்படி நம்மைப் போல் யாரும் தவிக்கக் கூடாது என்கிற நோக்கத்தில்தான் திரைப்பாக்கூடம் தொடங்கினேன். பல திரைக்கவிஞர்களை உருவாக்கி வருகிறேன். என்றார்.