‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
சின்னத்திரை நடிகை பிரியங்கா நல்காரி தனது காதலர் ராகுலை அவசர அவசரமாக திருமணம் முடித்தார். திருமணம் முடித்த கையோடு கணவருக்காக நடிப்பதை இனி கைவிடுவதாக சீரியலை விட்டு வெளியேறினார். ஆனால், சில நாட்களிலேயே கணவருடன் எடுத்த புகைப்படங்களை டெலிட் செய்தார். அதன்பிறகு திடீரென நளதமயந்தி என்கிற புதிய தொடரில் மீண்டும் ஹீரோயினாக கமிட்டானார். அப்போது ஒரு முறை ரசிகர்ககளின் கேள்விக்கு பதிலளித்த ப்ரியங்கா நான் சிங்கிளாக இருப்பதாக தெரிவித்தார். இதன்மூலம் ராகுலை விட்டு ப்ரியங்கா பிரிந்துவிட்டதாக அனைவரும் நினைத்தனர். இந்நிலையில், ப்ரியங்கா தனது பிறந்தநாளை கணவர் ராகுலுடன் சேர்ந்து கொண்டாடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் தனது கணவர் குறித்து உருக்கமான ஹாஸ்டேக்குகளையும் சேர்த்து பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மீண்டும் ராகுலுடன் ப்ரியங்கா இணைந்துவிட்டாரா? என அதிர்ச்சியுடன் கேட்டு வருகின்றனர். மேலும், இந்த பிறந்தநாளுக்கு பிறகாவது இருவரும் சண்டையில்லாமல் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனவும் அட்வைஸ் செய்து வாழ்த்தி வருகின்றனர்.