புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா படத்தால் எங்களுக்கு 33 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. அதனை ரஜினிகாந்த் தயாரிப்பாளரிடமிருந்து பெற்றுத் தரவேண்டும் என்று விநியோகஸ்தர்களில் ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ரஜினி வீட்டு முன் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் ரஜினியை களங்கப்படுத்தும் விநியோகஸ்தர்களை எதிர்த்து நாங்களும் போராடுவோம் என்று ரஜினி ரசிகர்கள் அறிவித்திருக்கிறார்கள். இதற்காக தமிழ்நாடு முழுவதும் ரஜினி ரசிகர்களை திரட்டும் வேலை சத்தமின்றி நடந்து வருகிறது. ரஜினி ரசிகர்கள் தங்களது இணையதளத்தில் "எதையும் இழப்போம் ரஜினிக்காக, எதற்காகவும் இழக்க மாட்டோம் ரஜினியை" என்ற தலைப்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தலைவர் ரஜினியின் புகழைக் கெடுக்க அவர் செல்வாக்கை ஒழிக்க வஞ்சக சூழ்ச்சி செய்கிறவர்கள் அடங்காவிட்டால், அவர்களை கண்டித்து ரஜினி ரசிகர்களால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும், 1999ல் ரஜினியின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு ஆட்சியையே மாற்றியவர்கள் நாங்கள். நம் பலத்தை காட்டாததால்தான் நம் பலம் தெரியாமல் சதிக்கூட்டங்கள் கிளம்புகிறது. தலைவரின் தம்பிகளே வாருங்கள். தலைவர் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்போம். என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.