சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
கமல் நடிக்கும் படங்கள் என்றாலே அவரது தலையீடும் ஓரளவு இருக்கும் என்று சில டைரக்டர்கள் சொல்வதுண்டு. அதை சிலர் தலையீடு என்று கருதினாலும், சிலர் படம் நன்றாக வர வேண்டுமே என்கிற ஆர்வம் என்றும் நினைக்கிறார்கள். இன்னும் சிலரோ, அவருக்குள்ளும் ஒரு டைரக்டர் இருப்பதால்தான் தனக்கு தோன்றிய விசயங்களை டைரக்டருடன் பகிர்ந்து கொண்டு நடிக்கிறார் என்கிறார்கள்.
இப்படி கமலைப்பற்றி பலரும் பலவிதமாக சொல்லி வரும் நிலையில், பாபநாசம் படத்திலும் கமலின் தலையீடு இருப்பதாக அதன் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே ஒரு செய்தி உலவிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த செய்தி அப்படத்தின் டைரக்டரான ஜீத்து ஜோசப்பின் காதுகளுக்கு சென்றபோது, அப்படியெல்லாம் எதுவும் இல்லை. கமல் சார் ஒரு ஆர்ட்டிஸ்டாக மட்டுமே நடந்து கொள்கிறார். அந்த வகையில், நான் முழு சுதந்திரத்துடன் பாபநாசம் படத்தை இயக்கி வருகிறேன் என்கிறார்.
மேலும், த்ரிஷ்யம் படம் கமல சாருக்கு ரொம்ப பிடித்தமானது. எனது டைரக்ஷன் பற்றி ரொம்பவே பாராட்டினார். அதனால் தான் என் இயக்கத்தில் நடிக்கவும் சம்மதித்தார். இப்போது ஸ்பாட்டுக்கு வந்து விட்டால் அந்த கதாபாத்திரமாகவேதான் அவரை பார்க்க முடிகிறது. மலையாளம், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் வெளியாகி விட்ட அப்படத்தில் நான்காவதாக அவர் நடிப்பதால், ஏதாவது வித்தியாசம் காட்ட வேண்டும் என்ற துடிப்பு அவரிடம் அதிகமாகவே உள்ளது. அதனால் ஒவ்வொரு காட்சியிலும் அதிகமாக மெனக்கெடுகிறார் கமல் சார் என்கிறார் ஜீத்து ஜோசப்.