பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தில் அறிமுகமான ஐந்து இளைஞர்களில் தமனும் ஒருவர். அந்தப் படத்தில் நடித்த சித்தார்த், பரத், நகுல் மூவரும் அடுத்தடுத்து படங்களில் நடித்து நாயகர்களாகினாலும், சித்தார்த் மட்டுமே தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பரத் இடையில் சொதப்பினாலும் தற்போது மீண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறார். நகுலுக்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லையென்றாலும் ஒரு சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். மணிகண்டன் மட்டுமே காணாமல் போய்விட்டார். அந்த ஐவரில் ஒருவரான தமன் அதன் பின் இசையமைப்பாளராகிவிட்டார்.
2009ல் வெளியான 'சிந்தனை செய்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானாலும் அதன் பின் வெளிவந்த 'ஈரம்' படமே அவரை அடையாளம் காட்டியது. தொடர்ந்து அவர் பல தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தாலும் 'காஞ்சனா, காதலில் சொதப்புவது எப்படி, கண்ணா லட்டு திண்ண ஆசையா' ஆகிய படங்கள் மட்டுமே அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தது. ஆர்யா, விஷால், கார்த்தி ஆகியோர் நடித்த படங்களுக்கு இசையமைத்தாலும் தமிழில் மட்டும் இன்னும் முன்னணி இசையமைப்பாளராக வர முடியாமல் தவித்து வருகிறார். தெலுங்கைப் பொறுத்தவரை இப்போதைக்கு அவர்தான் நம்பர் 1 இசையமைப்பாளராக இருக்கிறார். அவர் இசையமைத்துள்ள 'ரபாஷா, பவர்' ஆகிய படங்களின் இசை வெளியீடு கடந்த வாரம்தான் நடைபெற்றது.
தமிழில் அடுத்து ஆர்யா நடிக்கும் 'மீகாமன்', படத்தைத்தான் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைபெற உள்ளது. தெலுங்கில் புகழும், பெயரும் கிடைத்து விட்டாலும், தமிழில் மட்டும் தடுமாற்றத்துடனேயே இருக்கிறார். ஒரு மிகப் பெரிய வெற்றிப் படம் அமைந்து விட்டால் இங்கும் முன்னணிக்கு வந்துவிடுவார்.