பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான கூலி படத்தில் ப்ரீத்தி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன். அதையடுத்து டிரெயின் படத்தில் நடித்துள்ள ஸ்ருதிஹாசன் அடுத்து பிரபாஸின் சலார் படத்தின் இரண்டாம் பாகத்தில் விரைவில் நடிக்கப் போகிறார். இந்நிலையில் சென்னையில் நடந்த ஒரு செல்போன் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஸ்ருதிஹாசன்.
அப்போது அவர் மீடியாக்களை சந்தித்தபோது, எல்லோரையும் போன்று நானும் செல்போனை ரொம்ப அதிகமாக யூஸ் பண்ணுகிறேன். மற்ற வேலைகளில் இருந்தாலும் கூட செல்போனையும் பயன்படுத்துகிறேன். அதை பயன்படுத்தாமல் இருக்க முடியவில்லை. செல்போனை பயன்படுத்துவதால் மகிழ்ச்சியாக உள்ளது. அதே சமயம் சில சமயங்களில் அவுட்டோர் செல்லும்போது சிக்னல் கிடைக்கவில்லை என்றால் ரொம்ப வெறுப்பாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.