வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் | கரூர் சம்பவம் தனி நபர் மட்டுமே பொறுப்பல்ல... : அஜித் பேட்டி | என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான கூலி படத்தில் ப்ரீத்தி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன். அதையடுத்து டிரெயின் படத்தில் நடித்துள்ள ஸ்ருதிஹாசன் அடுத்து பிரபாஸின் சலார் படத்தின் இரண்டாம் பாகத்தில் விரைவில் நடிக்கப் போகிறார். இந்நிலையில் சென்னையில் நடந்த ஒரு செல்போன் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஸ்ருதிஹாசன்.
அப்போது அவர் மீடியாக்களை சந்தித்தபோது, எல்லோரையும் போன்று நானும் செல்போனை ரொம்ப அதிகமாக யூஸ் பண்ணுகிறேன். மற்ற வேலைகளில் இருந்தாலும் கூட செல்போனையும் பயன்படுத்துகிறேன். அதை பயன்படுத்தாமல் இருக்க முடியவில்லை. செல்போனை பயன்படுத்துவதால் மகிழ்ச்சியாக உள்ளது. அதே சமயம் சில சமயங்களில் அவுட்டோர் செல்லும்போது சிக்னல் கிடைக்கவில்லை என்றால் ரொம்ப வெறுப்பாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.