பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

ஓரிரு படங்களில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தாலும் தனது பரபரப்பான பேட்டிகளில் பிரபலமானவர் ஸ்ரீரெட்டி. ஆந்திரா, தமிழ்நாட்டில் உள்ள முக்கிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.
ஆனால் தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் தான் யு-டியூப்பில் சமையல் நிகழ்ச்சி நடத்தி வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது "சினிமா பாலியல் கொடுமைகளை நான் வெளியே சொன்னபோது, யாருமே எனக்கு ஆதரவு தரவில்லை. சில நடிகைகள் என்னை விமர்சித்தார்கள். ஒரு பார்ட்டியில் எனக்கே வலுக்கட்டாயமாக உதட்டில் 'கொகைன்' தடவி விட்டுள்ளார்கள்.
பல ஆயிரம் கோடி புழங்கும் சினிமா துறையில் நடக்கும் குற்றங்களை வெளியே சொன்னேன். ஆனால் கடைசியில் நான் குற்றவாளியாகி நிற்கிறேன். உண்மையை சொல்லி போராடிய எனக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை. எனக்கு அநியாயம் செய்தவர்களை 'கர்மா' இப்போது தண்டனை கொடுத்து கொண்டிருக்கிறது.
சினிமாவில் நடக்கும் அநியாயங்களை தைரியமாக பேசியதால் படவாய்ப்புகள் இல்லாமல் பரிதவித்து நிற்கிறேன். இதனால் நானே ஒரு 'யுடியூப்' சேனல் தொடங்கி சமையல் நிகழ்ச்சி நடத்தி வருகிறேன். கவர்ச்சி ஆடை அணிந்து சமையல் நிகழ்ச்சி நடத்துவதாக விமர்சனம் செய்கிறார்கள். எனக்கு வேறு வழியில்லை. எனக்கு பிடிக்காத போதும், கவர்ச்சியை காட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். 'யுடியூப்' சேனல் மூலம் கிடைக்கும் வருமானம்தான் இப்போது என்னை வாழ வைக்கிறது" என்கிறார்.