தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
எல்லா இயக்குனர்களையும் போல சினிமாவில் நடிப்பு வாய்ப்பு தேடி வந்தவர்தான் கஸ்தூரி ராஜா. ஆனால் தற்போது அவர் நடித்து வெளிவந்து 'படைத் தலைவன்' படம்தான் அவர் முதல் படம் என்று எல்லோரும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 1985ம் ஆண்டு வெளிவந்த 'அவள் சுமங்கலிதான்' படத்தில் அவர்தான் வில்லன். படத்தில் அவர் கம்பவுண்டராக நடித்திருந்தாலும் படம் முழுக்க வரும் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார்.
அதன்பிறகு 1992ம் ஆண்டு தான் இயக்கிய 'மவுன மழை' என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது அவர் 'சமரன்' என்ற படத்தில் ராணுவ கமாண்டராக நடித்து வருகிறார். அதோடு 'ஹபீபி' என்ற படத்தில் இஸ்லாமிய குடும்பத் தலைவராக கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
ஆனால் அவர் மகன்கள் இயக்கும் படத்தில் நடித்ததில்லை. தன்னை கதை நாயகனாக கொண்டு படத்தின் கதையை எழுதி வைத்துள்ளார். அந்த படத்தை விரைவில் அவர் தொடங்குவார் என்று தெரிகிறது.