நாங்க இருக்கிறோம், ஆதரவு கொடுக்கிறோம் : அஜித்தை பார்க்க செல்லும் திரைபிரபலங்கள் | ரீ ரிலீஸில் மோதும் விஜய், அஜித் | சூர்யாவுக்கு வைத்திருந்த 'இரும்புக் கை மாயாவி', கை மாறிவிட்டதா ? | துரந்தர் 2 ஒத்தி வைக்கப்படவில்லை : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் | பிரபாஸின் ஸ்பிரிட் பட ரிலீஸ் தேதி வெளியானது | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் சிறை | கவலையில் கிர்த்தி ஷெட்டி, பிரார்த்தனா, நிதி அகர்வால், மாளவிகா மோகனன் | மெளனம் பேசியதே ரீ ரிலீஸ் ஆகிறது | அடுத்தடுத்து தனுஷ் மீது தொடரும் அவதூறுகள் | ஹீரோயின் விஷயத்தில் பிரதீப் ரங்கநாதன் கில்லாடி |

எல்லா இயக்குனர்களையும் போல சினிமாவில் நடிப்பு வாய்ப்பு தேடி வந்தவர்தான் கஸ்தூரி ராஜா. ஆனால் தற்போது அவர் நடித்து வெளிவந்து 'படைத் தலைவன்' படம்தான் அவர் முதல் படம் என்று எல்லோரும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 1985ம் ஆண்டு வெளிவந்த 'அவள் சுமங்கலிதான்' படத்தில் அவர்தான் வில்லன். படத்தில் அவர் கம்பவுண்டராக நடித்திருந்தாலும் படம் முழுக்க வரும் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார்.
அதன்பிறகு 1992ம் ஆண்டு தான் இயக்கிய 'மவுன மழை' என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது அவர் 'சமரன்' என்ற படத்தில் ராணுவ கமாண்டராக நடித்து வருகிறார். அதோடு 'ஹபீபி' என்ற படத்தில் இஸ்லாமிய குடும்பத் தலைவராக கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
ஆனால் அவர் மகன்கள் இயக்கும் படத்தில் நடித்ததில்லை. தன்னை கதை நாயகனாக கொண்டு படத்தின் கதையை எழுதி வைத்துள்ளார். அந்த படத்தை விரைவில் அவர் தொடங்குவார் என்று தெரிகிறது.




