Advertisement

சிறப்புச்செய்திகள்

'விக்ரம்' டிரைலர் சாதனையை முறியடித்த 'தக் லைப்' டிரைலர் | நயன்தாரா நடிப்பது பற்றிய வீடியோ, 'இவ்ளோ சுமாரா' எடுத்திருக்க வேண்டுமா? | ஆட்டுக்கார அலமேலு, முத்து, தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் - ஞாயிறு திரைப்படங்கள் | தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? | பால்கே பயோபிக் ; ராஜமவுலி குழுவினர் சந்திக்கவேயில்லை - பால்கே பேரன் | குபேரா - தமிழக உரிமை வியாபாரம் எவ்வளவு தெரியுமா ? | இளையராஜா 'ரெபரன்ஸ்' : இரண்டு 200 கோடிகளை அள்ளிய மலையாளப் படங்கள் | குடும்பத்தை பிரித்தேனா... பொய்யான குற்றச்சாட்டு : மகளுடன் சேர்ந்து வாழ ரவி மோகனுக்கு மாமியார் கோரிக்கை | மே 24ல் ஜப்பானில் ரிலீஸ் ஆகும் டூரிஸ்ட் பேமிலி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா விவகாரம்: தனுஷ் அப்பா கஸ்தூரிராஜா என்ன சொல்கிறார்?

17 நவ, 2024 - 12:54 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-Issue:-What-does-Dhanushs-father-Kasthuriraja-say


நயன்தாரா பற்றிய 'நயன்தாரா - பியான்ட் த பேரி டேல்' என்ற டாகுமென்டரியில், 'நானும் ரௌடிதான்' படத்தின் காட்சிகள், பாடல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த அதன் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் தரப்பிலிருந்து 2 ஆண்டுகளாக 'என்ஓசி' வழங்கப்படவில்லை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், தனுஷ் பற்றியும் நயன்தாரா நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விவகாரம் தொடர்பாக கோலிவுட் வட்டாரங்களில் விசாரித்தபோது, நயன்தாரா ஆவணப்படத்தில் நானும் ரெளடிதான் பட பாடலை சில வினாடிகள் பயன்படுத்தியதற்காக தனுஷ் 10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியது உண்மை தான் என தெரியவந்தது. அதேநேரத்தில் ஆவணப்படத்தை வெளியிடும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு நயன்தாரா ரூ.60 கோடிக்கு மேல் ஆவணப்படத்தை விற்றுள்ளதும் தெரியவந்தது. படத்தை பணத்திற்கு விற்றவரிடம், அனுமதியில்லாமல் பயன்படுத்தியதற்காக பணம் கேட்டதில் தவறில்லை என்கிறது தனுஷ் ரசிகர்கள் தரப்பு.

ஆனால், தனுஷ் பற்றி நயன்தாரா பயன்படுத்திய வார்த்தைகளை வைத்து பார்க்கும்போது, இது வெறும் நானும் ரெளடிதான் படம் பற்றிய பஞ்சாயத்து மட்டுமல்ல என்பது ஓரளவு தெரிகிறது. இது பற்றி தகவலறிந்தவர்களிடம் விசாரித்ததில், உத்தம புத்திரன் படப்பிடிப்பின் போது, பாண்டிச்சேரியில் இருந்தபோது தனுஷ், அங்குவந்த நயன்தாராவிடம் நெருக்கமான தோழமையோடு இருந்துள்ளார்.

நயன்தாரா, விஜய்சேதுபதி நடிப்பில் நானும் ரௌடி தான் படத்தை தனுஷ் தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்கினார். இதில் சொன்ன பட்ஜெட்டில் படத்தை முடிக்காமல் 2 மடங்கு அதிகமாக செலவை விக்னேஷ்சிவன் இழுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த தனுஷ், தான் தயாரிப்பாளர் ஆனாலும் எந்த நிகழ்ச்சிக்கும் இவர் வராமல் இருந்தார். இதுபற்றி அதிகம் பேசவில்லை. அதற்கு நயன் - விக்கி காதலும் ஒரு காரணமாக கூறப்பட்டது. தன்னை பெரும் சுமைக்கு இழுத்துச் விட்டதாக நினைத்தார். இருவருக்குமிடையிலான வாழ்க்கையில் விக்னேஷ் சிவன் வந்ததில் இருந்து, நிறைய மன கசப்புகள் இருவருக்குள்ளும் வந்திருக்கிறது. இதனால் தனுஷ் அன்று முதல் தன் நட்பை இருவரிடமும் முறித்துக் கொண்டார்.
இது ஒரு பக்கம் இருக்க இந்த ஆவணப் படத்திற்கு பெரிய விளம்பரத்தை தேடி கொள்கிறார் நயன்தாரா என்றும் சிலர் சொல்கின்றனர்.
பெரும் விவாதத்திற்கு உள்ளான இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை தனுஷ் தரப்பில் எந்தவித விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இது பற்றி தனுஷின் தந்தை கஸ்தூரிராஜாவிடம் நாம் கேட்டபோது அவர் கூறியதாவது: ‛‛இந்த தகவல் தாமதமாகதான் எனக்கு கிடைத்தது. எங்களை பொறுத்தவரையில் நாங்கள் முன்னே ஓடிக் கொண்டிருக்கிறோம், எங்களுக்கு வேலை தான் முக்கியம். பின்னால் துரத்துபவர்களையோ, பின்னால் பேசுபவர்களையோ பற்றி சிந்திக்கவோ பதில் கொடுக்கவோ நேரம் இல்லை. என்னைப் போலவே என் மகனும் வேலையில் மட்டும் தான் கவனம் செலுத்துவான். தற்போது ‛இட்லி கடை' படப்பிடிப்பு வேலையில் இருக்கிறார். எனக்கு தெரிந்து நயன்தாரா சொன்னது போல் இரண்டு ஆண்டு காலம் காத்திருந்தது என்பதெல்லாம் உண்மையான செய்தி அல்ல. இதைப்பற்றி பேச வேண்டாம் என்று நான் தவிர்க்கிறேன்.''என்றார்.

எனவே, தனுஷ் தரப்பில் இருந்து நயன்தாரா கடிதத்திற்கு பதில் அளிக்கவோ, மறுப்பு தெரிக்கவோ மாட்டார் என்றே தெரிகிறது. இவற்றை கண்டுகொள்ளாமல் பட வேலைகளில் பிஸியாக இருந்துவருகிறார் தனுஷ்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'கங்குவா' பற்றி ஜோதிகாவின் விமர்சனமும், விமர்சனங்களுக்கான விமர்சனமும்…'கங்குவா' பற்றி ஜோதிகாவின் ... ரஜினி பிறந்த நாளில் முதல் முறையாக ரீ ரிலீஸ் ஆகும் தளபதி படம்! ரஜினி பிறந்த நாளில் முதல் முறையாக ரீ ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in