ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அக்கா, தங்கை |

நயன்தாரா பற்றிய 'நயன்தாரா - பியான்ட் த பேரி டேல்' என்ற டாகுமென்டரியில், 'நானும் ரௌடிதான்' படத்தின் காட்சிகள், பாடல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த அதன் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் தரப்பிலிருந்து 2 ஆண்டுகளாக 'என்ஓசி' வழங்கப்படவில்லை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், தனுஷ் பற்றியும் நயன்தாரா நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விவகாரம் தொடர்பாக கோலிவுட் வட்டாரங்களில் விசாரித்தபோது, நயன்தாரா ஆவணப்படத்தில் நானும் ரெளடிதான் பட பாடலை சில வினாடிகள் பயன்படுத்தியதற்காக தனுஷ் 10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியது உண்மை தான் என தெரியவந்தது. அதேநேரத்தில் ஆவணப்படத்தை வெளியிடும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு நயன்தாரா ரூ.60 கோடிக்கு மேல் ஆவணப்படத்தை விற்றுள்ளதும் தெரியவந்தது. படத்தை பணத்திற்கு விற்றவரிடம், அனுமதியில்லாமல் பயன்படுத்தியதற்காக பணம் கேட்டதில் தவறில்லை என்கிறது தனுஷ் ரசிகர்கள் தரப்பு.
ஆனால், தனுஷ் பற்றி நயன்தாரா பயன்படுத்திய வார்த்தைகளை வைத்து பார்க்கும்போது, இது வெறும் நானும் ரெளடிதான் படம் பற்றிய பஞ்சாயத்து மட்டுமல்ல என்பது ஓரளவு தெரிகிறது. இது பற்றி தகவலறிந்தவர்களிடம் விசாரித்ததில், உத்தம புத்திரன் படப்பிடிப்பின் போது, பாண்டிச்சேரியில் இருந்தபோது தனுஷ், அங்குவந்த நயன்தாராவிடம் நெருக்கமான தோழமையோடு இருந்துள்ளார்.
நயன்தாரா, விஜய்சேதுபதி நடிப்பில் நானும் ரௌடி தான் படத்தை தனுஷ் தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்கினார். இதில் சொன்ன பட்ஜெட்டில் படத்தை முடிக்காமல் 2 மடங்கு அதிகமாக செலவை விக்னேஷ்சிவன் இழுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த தனுஷ், தான் தயாரிப்பாளர் ஆனாலும் எந்த நிகழ்ச்சிக்கும் இவர் வராமல் இருந்தார். இதுபற்றி அதிகம் பேசவில்லை. அதற்கு நயன் - விக்கி காதலும் ஒரு காரணமாக கூறப்பட்டது. தன்னை பெரும் சுமைக்கு இழுத்துச் விட்டதாக நினைத்தார். இருவருக்குமிடையிலான வாழ்க்கையில் விக்னேஷ் சிவன் வந்ததில் இருந்து, நிறைய மன கசப்புகள் இருவருக்குள்ளும் வந்திருக்கிறது. இதனால் தனுஷ் அன்று முதல் தன் நட்பை இருவரிடமும் முறித்துக் கொண்டார்.
இது ஒரு பக்கம் இருக்க இந்த ஆவணப் படத்திற்கு பெரிய விளம்பரத்தை தேடி கொள்கிறார் நயன்தாரா என்றும் சிலர் சொல்கின்றனர்.
பெரும் விவாதத்திற்கு உள்ளான இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை தனுஷ் தரப்பில் எந்தவித விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இது பற்றி தனுஷின் தந்தை கஸ்தூரிராஜாவிடம் நாம் கேட்டபோது அவர் கூறியதாவது: ‛‛இந்த தகவல் தாமதமாகதான் எனக்கு கிடைத்தது. எங்களை பொறுத்தவரையில் நாங்கள் முன்னே ஓடிக் கொண்டிருக்கிறோம், எங்களுக்கு வேலை தான் முக்கியம். பின்னால் துரத்துபவர்களையோ, பின்னால் பேசுபவர்களையோ பற்றி சிந்திக்கவோ பதில் கொடுக்கவோ நேரம் இல்லை. என்னைப் போலவே என் மகனும் வேலையில் மட்டும் தான் கவனம் செலுத்துவான். தற்போது ‛இட்லி கடை' படப்பிடிப்பு வேலையில் இருக்கிறார். எனக்கு தெரிந்து நயன்தாரா சொன்னது போல் இரண்டு ஆண்டு காலம் காத்திருந்தது என்பதெல்லாம் உண்மையான செய்தி அல்ல. இதைப்பற்றி பேச வேண்டாம் என்று நான் தவிர்க்கிறேன்.''என்றார்.
எனவே, தனுஷ் தரப்பில் இருந்து நயன்தாரா கடிதத்திற்கு பதில் அளிக்கவோ, மறுப்பு தெரிக்கவோ மாட்டார் என்றே தெரிகிறது. இவற்றை கண்டுகொள்ளாமல் பட வேலைகளில் பிஸியாக இருந்துவருகிறார் தனுஷ்.




