2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் டப்பிங் தொழில்நுட்பம் வந்த பிறகு ஏராளமான தெலுங்கு, கன்னட படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. மலையாளத்தை பொறுத்தவரை மலையாள படங்கள் நேரடியாக தமிழில் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. சில படங்கள் மலையாளம், தமிழ் இரண்டு மொழிகளிலும் தயாராகி வெளியாகி இருக்கிறது. ஆனால் முதன் முதலாக டப் செய்யப்பட்டு வெளியான முதல் மலையாளப் படம் 'சேச்சி'.
இந்த படம் தமிழில் 'நடிகை' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்த படத்தில்தான் இளையராஜாவின் இசை குருவான ஜி.கே.வெங்கடேஷ் இசை அமைப்பாளராக அறிமுகமானார். டி.ஜானகி ராமன் இயக்கிய இந்த படத்தில் கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர், மிஸ்.குமாரி, ஆரன்முள பொன்னம்மா, எஸ்.பி.பிள்ளை உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
கொச்சின் பிரதர்ஸ் சார்பில் சுவாமி நாராயணன் தயாரித்திருந்தார். 1950ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த படம் அடுத்த ஆண்டு தமிழில் வெளியானது. ஒரு சாதாரண நடுத்தர கும்பத்து பெண் நடிகை ஆவதுதான் படத்தின் கதை.