மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா- நாகசைதன்யா ஆகிய இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்த போதிலும், தங்களது பிரிவுக்கான காரணத்தை அவர்கள் வெளியிடவில்லை. அதனால் சோசியல் மீடியாவில் அவர்களின் பிரிவு குறித்து பல்வேறு விதமாக வதந்திகள் பரவிக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக சமந்தாவின் காஸ்டியூமர் பிரீத்தம் ஜுகல்கர் என்பவருடனும் சமந்தாவை இணைத்து செய்திகள் பரவின. அதையடுத்து அதை சமந்தா மறுத்ததோடு, பிரீத்தமும், சமந்தா எனது சகோதரி போன்றவர் என்று பதில் கொடுத்தார்.
இந்தநிலையில் சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி அளித்த ஒரு பேட்டியில், சமந்தா- பிரீத்தம் ஜுகல்கரை இணைத்து வெளியான செய்தி பற்றி கூறுகையில், சமந்தா- பிரீத்தமிற்கு இடையிலான நட்பு காரணமாக கண்டிப்பாக சமந்தா விவகாரத்து செய்ய வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். காரணம், பிரீத்தம் ஒரு ஓரினச்சேர்க்கையாளர். அதனால் அவர்களுக்கிடையே எந்தவித தவறான உறவும் இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். சமீபகாலமாக சமந்தா ஓவரான கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். அதனால் நாகசைதன்யா சமந்தாவிற்கிடையே அந்த விசயத்தில்கூட பிரச்சினை உருவாகி பிரிவுக்கு காரணமாகியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீரெட்டி.