சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் | காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' | ‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் | ‛‛100 வருஷம் ஆனாலும் பாசம் மாறாது'' : மதுரை மக்கள் பற்றி விஷால் கருத்து |
காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா- நாகசைதன்யா ஆகிய இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்த போதிலும், தங்களது பிரிவுக்கான காரணத்தை அவர்கள் வெளியிடவில்லை. அதனால் சோசியல் மீடியாவில் அவர்களின் பிரிவு குறித்து பல்வேறு விதமாக வதந்திகள் பரவிக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக சமந்தாவின் காஸ்டியூமர் பிரீத்தம் ஜுகல்கர் என்பவருடனும் சமந்தாவை இணைத்து செய்திகள் பரவின. அதையடுத்து அதை சமந்தா மறுத்ததோடு, பிரீத்தமும், சமந்தா எனது சகோதரி போன்றவர் என்று பதில் கொடுத்தார்.
இந்தநிலையில் சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி அளித்த ஒரு பேட்டியில், சமந்தா- பிரீத்தம் ஜுகல்கரை இணைத்து வெளியான செய்தி பற்றி கூறுகையில், சமந்தா- பிரீத்தமிற்கு இடையிலான நட்பு காரணமாக கண்டிப்பாக சமந்தா விவகாரத்து செய்ய வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். காரணம், பிரீத்தம் ஒரு ஓரினச்சேர்க்கையாளர். அதனால் அவர்களுக்கிடையே எந்தவித தவறான உறவும் இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். சமீபகாலமாக சமந்தா ஓவரான கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். அதனால் நாகசைதன்யா சமந்தாவிற்கிடையே அந்த விசயத்தில்கூட பிரச்சினை உருவாகி பிரிவுக்கு காரணமாகியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீரெட்டி.