கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை |
சென்னை : 'தவறான நோக்கத்தில் அத்துமீற நினைப்பவர்களை செருப்பால் அடியுங்கள்' என, நடிகர் விஷால் கூறியுள்ளார். அதற்கு பதிலடி தரும் வகையில், 'என்னிடம் நிறைய செருப்பு உள்ளது; உங்களுக்கு வேண்டுமா?' என, நடிகை ஸ்ரீரெட்டி கேட்டுள்ளது, கேரளாவை போல, தமிழ் சினிமாவையும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
நடிகர் விஷால் நேற்று தன், 47வது பிறந்த நாளை கொண்டாடினார். இதற்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்திற்கு சென்று உணவு வழங்கினார். பின் அவரிடம், 'கேரள சினிமாவில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை போல, தமிழ் சினிமாவிலும் உள்ளதா?' என்று, நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு விஷால் கூறியதாவது: தமிழ் சினிமாவில், சில டுபாக்கூர் கம்பெனி நடத்துபவர்களால், நடிக்க வாய்ப்பு தேடி வரும், 80 சதவீத பெண்கள் ஏமாற்றப்படுகின்றனர். நிறுவனங்கள் குறித்து ஆராய்ந்து, அங்கு வாய்ப்பு தேடி செல்ல வேண்டும். வாய்ப்பு தேடி வரும் பெண்களை, நடிகையரை, அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய யார் அழைத்தாலும், செருப்பால் அடியுங்கள் என்றார். மேலும் என் மீது புகார் கூறிய ஸ்ரீரெட்டி யார் என்றே எனக்கு தெரியாது. ஆனால், அவர் செய்த சேட்டைகள் எல்லாம் எனக்கு தெரியும் என தெரிவித்தார்.
விஷால் கருத்து குறித்து, எக்ஸ் பக்கத்தில் நடிகை ஸ்ரீரெட்டி கூறியிருப்பதாவது: நீங்கள் ஒரு பெண்ணை பற்றி பேசும் போது, உங்கள் நாக்கு ஊடகங்களுக்கு முன், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பிரச்னைகளை உருவாக்கும் விதம் அனைவருக்கும் தெரியும். நீங்கள் ஏற்கனவே பல முறை நிரூபித்துள்ளீர்கள். செய்த கர்மா ஏற்கனவே உங்களுக்கு நன்றாக வேலை செய்கிறது. என்னிடம் நிறைய செருப்பு சேகரிப்புகள் உள்ளன. உங்களுக்கு ஒன்று வேண்டுமா என, தெரியப்படுத்துங்கள் என குறிப்பிட்டுள்ளார்.