பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி | திலீப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'பைசன்' வரவேற்பு: அனுபமா பரமேஸ்வரன் நீண்ட நன்றிப் பதிவு | திரைப்படத் தொழிலாளர்களுக்கும் பங்கு: தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு | காந்தாரா சாப்டர் 1 : ஆன்லைன் இணையதளத்தில் 14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை | மீண்டும் மகன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் ? | கேஜிஎப் ஒளிப்பதிவாளர் திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ லீலா | டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் |

ஒரு சில படங்களில் சிறிய வேடத்தில் நடித்தவர் ஸ்ரீரெட்டி. தெலுங்கு சினிமாவில் தனக்கு வாய்ப்பு தர மறுப்பதாக கூறி நடிகர் சங்கம் முன்பு அரைநிர்வாண போராட்டம் நடத்தியன் மூலம் பரபரப்பானவர். தற்போது சென்னையில் செட்டிலாகி இருக்கும் அவர் பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்களை கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் அவரது வாழ்க்கை கதை சினிமாவாகிறது. படத்துக்கு ரெட்டி டயரி என்று பெயர் வைத்துள்ளனர். திரைப்படக் கல்லூரி மாணவர் ராஜாங்கம் என்பவர் இயக்குகிறார். ரவிதேவன் என்பவர் தயாரிக்கிறார். இந்த நிலையில் படத்தை தயாரிக்க கூடாது, வெளியிடக்கூடாது என்று தனக்கு மிரட்டல் வருவதாக தயாரிப்பாளர் ரவிதேவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ரெட்டி டைரி படத்தை அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று போனில் எங்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம். படத்தில் உண்மை சம்பவங்கள் அப்படியே இடம் பெறுவதே இதற்கு காணரம். சினிமா வாய்ப்பு தேடும் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் கொடுமைகளை ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை வழியாக படம் சொல்வதே இந்த மிரட்டலுக்கு காரணம். என்றார்.