தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா | படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' |
மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் கடந்த 2017ல் 'தொண்டிமுதலும் திரிக் சாட்சியமும்' என்கிற படம் வெளியானது. இதற்கு முந்தைய வருடம் தான் பஹத் பாசிலை வைத்து 'மகேஷிண்டே பிரதிகாரம்' என்கிற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் திலீஷ் போத்தன் தான் இந்த படத்தை இயக்கினார். இதற்கு கதை மற்றும் திரைக்கதையை கதாசிரியர் சஜீவ் பழூர் எழுதியிருந்தார். இந்த படத்திற்காக சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்கிற பிரிவில் தேசிய விருதும் பெற்றார்.
இந்த நிலையில் தற்போது இயக்குனராக அறிமுகமாகி புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் சஜீவ் பழூர். இந்த படத்தில் கதாநாயகனாக சேத்தன் சீனு நடித்துள்ளார். இவர் தமிழில் 'கருங்காலி', தெலுங்கில் 'மந்த்ரா 2, ராஜு காரி கதி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர், தற்போது கே.டி குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஜென்டில்மேன் 2' படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாமல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. தெலுங்கு, மலையாளம் என இரு மொழி படமாக இது உருவாகிறது.