63 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'பெத்தி' டிரைலர் | இந்த வாரம், புதிய படங்கள் இல்லையா ? | 'சேயோன்' படப்பிடிப்பு தொடங்கியது: மதுரை விழாவில் கமல் பங்கேற்பு | நடுநிலையாளர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை: தயாரிப்பாளர்களுக்கு நடிகர் சங்கம் கோரிக்கை | பிளாஷ்பேக்: பத்திரிகையாளர்கள் உருவாக்கிய படம் | பிளாஷ்பேக்: பெண் விடுதலை பேசிய பி.விட்டலாச்சாரியா | பிரதமரின் வேண்டுகோளை ஏற்று வந்தே பாரத்தில் பயணித்த அனுபம் கெர் | சகோதரர் இறந்த துக்கத்தை மறைத்துக்கொண்டு மறுநாளே காமெடி காட்சியில் நடித்த ஊர்வசி | சாமியாடும் ரசிகர்கள்: நடிகர் சூர்யா வேண்டுகோள் | அமைச்சர் ராஜ் மோகனுக்கு செயலாளர் விஷால் எதிர்ப்பு, தலைவர் நாசர் வாழ்த்து |

முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்களுக்கு பிறகு இயக்குனர் ராம்குமார், நடிகர் விஷ்ணு விஷால் கூட்டணியில் கடந்த சில வருடங்களாக புதிய படம் ஒன்று உருவாகி வந்தது.
இன்று இப்படத்தை 'இரண்டு வானம்' என தலைப்பு வைக்கப்பட்டதாக பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இதில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஏற்கனவே இதன் பெரும்பாலான படப்பிடிப்பை ஊட்டியில் நடத்தியுள்ளனர். இப்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்கிறார்கள்.
இவர்கள் கூட்டணியில் முதலாவதாக உருவான ‛முண்டாசுப்பட்டி' படம் காமெடியாகவும், இரண்டாவதாக உருவான ‛ராட்சசன்' படம் திரில்லராகவும் வெளிவந்த நிலையில், 3வது படமான ‛இரண்டு வானம்', காதல் கதையாக வெளிவர உள்ளது.




