பொற்கோவில், வாகா எல்லை, ஜிலேபி… ஆண்ட்ரியாவின் பஞ்சாப் பயணம் | 'இந்தியன் 3' திட்டமிட்டபடி வெளியாகுமா? | பிளாஷ்பேக்: “கூண்டுக்கிளி” தந்த வேதனை; “குலேபகாவலி” தந்த சாதனை | 'ராபின்ஹூட்' படத்தில் ஆஸி., கிரிக்கெட் வீரர் வார்னரின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது | 'பெருசு' மாதிரியான படங்கள் தமிழ் சினிமாவுக்குத் தேவையா ? | நாக சைதன்யாவுடன் சேர்ந்து போட்ட 'டாட்டூ'வை அழித்துவிட்டாரா சமந்தா ? | குடித்துவிட்டு கார் ஓட்டிய இளைஞரால் பலியான பெண் ; ஜான்வி கபூர் கடும் கண்டனம் | முதல் நாள் தாக்கிவிட்டு மறுநாள் மன்னிப்பு கேட்டார் சல்மான்கான் ; நடிகர் அதி இராணி தகவல் | கடன் வாங்கி நடுத்தெருவுக்கு வந்தேன் - நீலிமா ராணி ஓப்பன் டாக் | இதயம் சீரியலிலிருந்து விலகிய கதாநாயகி |
நடிகை மஞ்சிமா மோகன் தமிழில் ‛அச்சம் என்பது மடமையடா, தேவராட்டம், சத்ரியன், களத்தில் சந்திப்போம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு நடிகர் கவுதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் திரைப்படங்களில் பெரிதளவில் நடிக்கவில்லை.
சமீபத்தில் ‛சுழல் 2' வெப் தொடரில் நடித்து அவரின் நடிப்பிற்கு நல்ல வரவேற்பு பெற்றார். தற்போது அளித்த பேட்டி ஒன்றில், அவர் கூறியதாவது, " என்னால் திரைக்கதை எழுத முடியாது. ஆனால் படங்களை இயக்க ஆசைப்படுகிறேன். எழுத்தாளர் எழுதும் கதையை திரையில் கொண்டு வர முடியும் என நம்புகிறேன். நான் மக்களை உன்னிப்பாக கவனிப்பவள். திரில்லர் படங்களை இயக்குவது எனக்கு கனவு. மனதில் பல கதைகள் இருந்தாலும் அவற்றை எழுத்தில் வடிக்க முடியவில்லை. அடுத்த 5, 6 ஆண்டுகளில் ஒரு படத்தை இயக்குவேன் என்கிற நம்பிக்கை எனக்குள் இருக்கிறது." இவ்வாறு தெரிவித்துள்ளார்.