அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
நடிகை மஞ்சிமா மோகன் தமிழில் ‛அச்சம் என்பது மடமையடா, தேவராட்டம், சத்ரியன், களத்தில் சந்திப்போம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு நடிகர் கவுதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் திரைப்படங்களில் பெரிதளவில் நடிக்கவில்லை.
சமீபத்தில் ‛சுழல் 2' வெப் தொடரில் நடித்து அவரின் நடிப்பிற்கு நல்ல வரவேற்பு பெற்றார். தற்போது அளித்த பேட்டி ஒன்றில், அவர் கூறியதாவது, " என்னால் திரைக்கதை எழுத முடியாது. ஆனால் படங்களை இயக்க ஆசைப்படுகிறேன். எழுத்தாளர் எழுதும் கதையை திரையில் கொண்டு வர முடியும் என நம்புகிறேன். நான் மக்களை உன்னிப்பாக கவனிப்பவள். திரில்லர் படங்களை இயக்குவது எனக்கு கனவு. மனதில் பல கதைகள் இருந்தாலும் அவற்றை எழுத்தில் வடிக்க முடியவில்லை. அடுத்த 5, 6 ஆண்டுகளில் ஒரு படத்தை இயக்குவேன் என்கிற நம்பிக்கை எனக்குள் இருக்கிறது." இவ்வாறு தெரிவித்துள்ளார்.