குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா | 'ஏஐ' மூலம் யார் வேண்டுமானாலும் வயலின் இசைக்கலாம்: ஏ ஆர் ரஹ்மான் | போட்டி ரிலீஸ் : பிரபாஸின் பெருந்தன்மை, ரசிகர்கள் பாராட்டு | விமான நிலையத்தில் தடுமாறி விழுந்த விஜய் | பிளாஷ் பேக் : இயக்கத்தில் தோற்ற யூகி சேது | பிளாஷ்பேக் : தோல்வி படத்தை வெற்றிப்படமாக்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் | படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! |

'பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா, வீர தீர சூரன்' என பல படங்களை இயக்கியவர் அருண்குமார். இவர் கமல்ஹாசனை சந்தித்து ஒரு கதை சொல்லி ஓகே செய்துள்ளார். அந்த கதை கமலுக்கு பிடித்து விட்டதை அடுத்து அப்படத்தை தனது ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக தயாரித்து நடிப்பதற்கு தயாராகி வருகிறார்.
அதோடு ஏற்கனவே ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்கும் தனது 237வது படத்தில் தக்லைப் படத்திற்கு பிறகு நடிக்க திட்டமிட்டிருந்தார் கமல்ஹாசன். ஆனால் அந்த கதையில் அவருக்கு போதுமான திருப்தி ஏற்படாததால் தற்போது மொத்த ஸ்கிரிப்ட்டையும் மாற்றுமாறு கூறியிருக்கிறார். அதனால் அப்படத்திற்கான புதிய ஸ்கிரிப்ட் எழுதும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதனால் தனது 237வது படத்தை அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ள கமல்ஹாசன், அதற்குள் அருண்குமார் இயக்கும் படத்தில் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளாராம்.