20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கூலி' டிரைலர் | திரிஷ்யம்-2 தயாரிப்பாளர் மீது பண மோசடி வழக்கு ; தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் | கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் | செல்வாக்கு மிக்கவர்களுக்கு கூட வளைந்து கொடுக்க மறுக்கும் சென்சார் போர்டு? | அகண்டா 2 : டப்பிங் பணிகளை நிறைவு செய்த பாலகிருஷ்ணா | வார் 2 படத்தில் சர்ப்ரைஸ் பாடல் |
'பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா, வீர தீர சூரன்' என பல படங்களை இயக்கியவர் அருண்குமார். இவர் கமல்ஹாசனை சந்தித்து ஒரு கதை சொல்லி ஓகே செய்துள்ளார். அந்த கதை கமலுக்கு பிடித்து விட்டதை அடுத்து அப்படத்தை தனது ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக தயாரித்து நடிப்பதற்கு தயாராகி வருகிறார்.
அதோடு ஏற்கனவே ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்கும் தனது 237வது படத்தில் தக்லைப் படத்திற்கு பிறகு நடிக்க திட்டமிட்டிருந்தார் கமல்ஹாசன். ஆனால் அந்த கதையில் அவருக்கு போதுமான திருப்தி ஏற்படாததால் தற்போது மொத்த ஸ்கிரிப்ட்டையும் மாற்றுமாறு கூறியிருக்கிறார். அதனால் அப்படத்திற்கான புதிய ஸ்கிரிப்ட் எழுதும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதனால் தனது 237வது படத்தை அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ள கமல்ஹாசன், அதற்குள் அருண்குமார் இயக்கும் படத்தில் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளாராம்.