வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

'அலிபதுஷா' என்ற கதை 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டங்களில் இந்தியா முழுவதும் புகழ்பெற்ற ஒரு கதை. ஒரு நவாப், அவரது குடும்பம் மற்றும் அவரது ஒழுக்கக்கேடான சகோதரனால் அவர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றிய பிரபலமான கதையாகும்.
இந்தக் கதை 1930களில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. ஆனால் அந்த காலத்திலேயே அந்த படம் தோல்வியை தழுவியது. அதன் தயாரிப்பாளர் தற்கொலை செய்து கொண்டதாக கூட சொல்வார்கள்.
இதே கதையை மாடர்ன் தியேட்டர் ஆர்.சுந்தரம் மீண்டும் திரைப்படமாக எடுக்க விரும்பினார். முன்பு இந்த படம் ஏன் தோல்வியடைந்தது என்பதை பற்றி ஆய்வு செய்தார். கதை திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்து மீண்டும் அந்த கதையை படம் ஆக்கினார். அதுதான் 'பாசவலை' 1957ம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அன்றைய காலகட்டத்தில் வசூலை வாரி குவித்த படமாகவும் அமைந்தது.
இந்த படத்தில் எம்.கே. ராதா, ஜி.வரலட்சுமி, எம்.என். ராஜம், வி.கோபாலகிருஷ்ணன், வி.கே. ராமசாமி, அ.கருணாநிதி, டி.பி. முத்துலட்சுமி, குமாரி ராஜாமணி, தி.க. ராஜேஸ்வரி, பாக்யம், எம்.ஆர்.சந்தானம், எஸ்.எம். திருப்பதிசாமி, எம்.என். கிருஷ்ணன், சாயிராம், 'மாஸ்டர்' பாஜி, 'மாஸ்டர்' வெங்கடேஷ், 'ஜெயக்கொடி' கே.நடராஜன் உள்பட பாலர் நடித்தனர். ஏ எஸ் நாகராஜன் இயக்கினார், விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்தனர்.




