ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் |

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரின் நீண்ட வருட காதலரான ஆண்டனி என்பவரை கரம் பிடித்தார். திருமணத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் திரைப்படங்களில் நடிப்பாரா என பலரின் கேள்வியாக இருந்தது. ஆனால் தொடர்ந்து படங்களில் நடிக்கும் எண்ணத்தில் தான் அவர் உள்ளார்.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் புதிதாக தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிப்பில் அசோக் செல்வன் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். இப்படத்தை புதுமுகம் ஒருவர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.