'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரின் நீண்ட வருட காதலரான ஆண்டனி என்பவரை கரம் பிடித்தார். திருமணத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் திரைப்படங்களில் நடிப்பாரா என பலரின் கேள்வியாக இருந்தது. ஆனால் தொடர்ந்து படங்களில் நடிக்கும் எண்ணத்தில் தான் அவர் உள்ளார்.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் புதிதாக தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிப்பில் அசோக் செல்வன் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். இப்படத்தை புதுமுகம் ஒருவர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.