எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' | மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ் | கேமராவுக்கு பின்னால் எனக்கு நடிக்க தெரியவில்லை : மீனாட்சி சவுத்ரி | 'ஜனநாயகன்' போல் பைரசியில் 'கருப்பு'?: அச்சத்தில் தயாரிப்பாளர்கள் | பரிதாபம் : ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒருவர் பலி | இளையராஜா குடும்பத்துடன் 50 ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது: மறைந்த பஞ்சு அருணாசலம் மகன் சுப்பு பஞ்சு பேட்டி | கருப்பு : அனைத்து பகல் காட்சிகளும் ரத்து | திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த நடிகை அஞ்சலி |

தமிழ் சினிமாவில் 'தும்பா' என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன். அதன் பிறகு 'கண்ணகி' என்ற படத்தில் நடித்தவர், 'ப்ளூ ஸ்டார்' படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து அந்த படத்தில் நடித்த போது அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டு அப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த நிலையில் கீர்த்தி பாண்டியன் அளித்துள்ள ஒரு பேட்டியில், தனது கணவர் அசோக் செல்வன் பற்றி கூறுகையில், ''மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய நல்ல மனதை கொண்டவர். சொந்த வாழ்க்கையோ, சினிமா துறையோ, எதுவாக இருந்தாலும் உண்மையாக இருப்பார். மன உறுதியுடன் செயல்படுவார். அதோடு வீட்டில் இருக்கும் போது கிச்சனுக்குள்ளும் புகுந்து விடுவார். சமைப்பது, பாத்திரங்கள் கழுவுவது என நான் செய்யும் அனைத்து வேலைகளையும் அவரும் எடுத்துக் கொண்டு செய்வார். அந்த அளவுக்கு பெண்களை மதிக்கக்கூடிய ஒரு நல்ல மனம் கொண்டவர் அசோக் செல்வன்,'' என்று தனது கணவரை பெருமையாக கூறியுள்ளார் கீர்த்தி பாண்டியன்.