விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' | பிரதமர் ரசித்த திருவாசக பாடல்: ஜனவரி 22ல் வெளியிடுகிறார் ஜி.வி.பிரகாஷ் | மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா கூட்டணி |

தமிழ் சினிமாவில் 'தும்பா' என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன். அதன் பிறகு 'கண்ணகி' என்ற படத்தில் நடித்தவர், 'ப்ளூ ஸ்டார்' படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து அந்த படத்தில் நடித்த போது அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டு அப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த நிலையில் கீர்த்தி பாண்டியன் அளித்துள்ள ஒரு பேட்டியில், தனது கணவர் அசோக் செல்வன் பற்றி கூறுகையில், ''மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய நல்ல மனதை கொண்டவர். சொந்த வாழ்க்கையோ, சினிமா துறையோ, எதுவாக இருந்தாலும் உண்மையாக இருப்பார். மன உறுதியுடன் செயல்படுவார். அதோடு வீட்டில் இருக்கும் போது கிச்சனுக்குள்ளும் புகுந்து விடுவார். சமைப்பது, பாத்திரங்கள் கழுவுவது என நான் செய்யும் அனைத்து வேலைகளையும் அவரும் எடுத்துக் கொண்டு செய்வார். அந்த அளவுக்கு பெண்களை மதிக்கக்கூடிய ஒரு நல்ல மனம் கொண்டவர் அசோக் செல்வன்,'' என்று தனது கணவரை பெருமையாக கூறியுள்ளார் கீர்த்தி பாண்டியன்.




