இனி ஹீரோ தான்: நடிகர் சூரி 'பளீச்' | பிளாஷ்பேக்: சர்வதேச விருதினை வென்றெடுத்த முதல் தமிழ் திரைப்படம் “வீரபாண்டிய கட்டபொம்மன்” | ஜுன் மாதத்தில் 4 பான் இந்தியா திரைப்படங்கள் ரிலீஸ் | 'விக்ரம்' டிரைலர் சாதனையை முறியடித்த 'தக் லைப்' டிரைலர் | நயன்தாரா நடிப்பது பற்றிய வீடியோ, 'இவ்ளோ சுமாரா' எடுத்திருக்க வேண்டுமா? | ஆட்டுக்கார அலமேலு, முத்து, தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் - ஞாயிறு திரைப்படங்கள் | தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? | பால்கே பயோபிக் ; ராஜமவுலி குழுவினர் சந்திக்கவேயில்லை - பால்கே பேரன் | குபேரா - தமிழக உரிமை வியாபாரம் எவ்வளவு தெரியுமா ? |
தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் 'ராஜாவின் பார்வையிலே' என்ற படத்தில் விஜய் நாயகனாக நடிக்க, இரண்டாவது ஹீரோவாக அந்த படத்தில் நடித்திருந்தார் அஜித். அதன் பிறகு ஒரு கட்டத்தில் இரண்டு பேருமே தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோக்கள் ஆகிவிட்ட நிலையில், எதிரும் புதிருமான போட்டியாளர்களாக இருந்தார்கள்.
இதன் காரணமாக விஜய் படங்கள் வெளியாகும் போது அஜித் ரசிகர்களும், அஜித் படங்கள் வெளியாகும்போது விஜய் ரசிகர்களும் எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டே வந்தார்கள். ஆனால் தற்போது தனது 69வது படத்தோடு விஜய் அரசியலுக்கு செல்லபோவதால் இதுவரை அவருக்கு எதிராக கருத்து பதிவிட்ட அஜித்தின் ரசிகர்கள், இப்போது அவரை பெருமைப்படுத்தும் வகையில் கமெண்டுகளை கொடுத்து வருகிறார்கள்.
அதை போன்று வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த 'தி கோட்' படத்தில் அஜித்தின் வசனத்தை விஜய் பேசி நடித்திருந்த நிலையில், தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தான் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் பிரபலமான வசனம் ஒன்றை தான் பேசி நடிக்கிறாராம் அஜித் குமார். என்னதான் தொழில் ரீதியாக இருவரும் போட்டியாளராக இருந்த போதும், தனிப்பட்ட முறையில் நண்பர்கள் என்பதால் விஜய் மீதான தனது அன்பை வெளிப்படுத்தும் வகையில் இப்படி அவரது வசனத்தை தான் பேசி நடிக்கப் போகிறாராம் அஜித் குமார்.