'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ், தெலுங்கு திரையுலகத்தில் முன்னணி நடன இயக்குனராக இருக்கும் ஜானி மாஸ்டர் மீது பாலியல் புகார் காரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சினிமாவில் நடனப் பெண்ணாக இருப்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு காரணமாக தெலுங்கு, தமிழ் திரையுலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மலையாளத் திரையுலகத்தில் ஹேமா கமிட்டி ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. தெலுங்குத் திரையுலகத்திலும் அது போன்ற கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என குரல் எழுந்தது. இந்நிலையில் ஜானி மாஸ்டர் பற்றிய புகார் தெலுங்குத் திரையுலகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் சேர்ந்த ஜானி மாஸ்டர் இந்த ஆண்டு நடந்து முடிந்த ஆந்திர சட்டசபைத் தேர்தலிலும் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் மீது பாலியல் புகார் எழுந்த நிலையில் அவரை உடனடியாக கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள்.