ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
தமிழ், தெலுங்கு திரையுலகத்தில் முன்னணி நடன இயக்குனராக இருக்கும் ஜானி மாஸ்டர் மீது பாலியல் புகார் காரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சினிமாவில் நடனப் பெண்ணாக இருப்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு காரணமாக தெலுங்கு, தமிழ் திரையுலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மலையாளத் திரையுலகத்தில் ஹேமா கமிட்டி ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. தெலுங்குத் திரையுலகத்திலும் அது போன்ற கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என குரல் எழுந்தது. இந்நிலையில் ஜானி மாஸ்டர் பற்றிய புகார் தெலுங்குத் திரையுலகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் சேர்ந்த ஜானி மாஸ்டர் இந்த ஆண்டு நடந்து முடிந்த ஆந்திர சட்டசபைத் தேர்தலிலும் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் மீது பாலியல் புகார் எழுந்த நிலையில் அவரை உடனடியாக கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள்.