Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: 100 நாள்களைக் கடந்து ஓடிய முதல் தமிழ் கலைப்படம் “சில நேரங்களில் சில மனிதர்கள்”

25 பிப், 2025 - 01:02 IST
எழுத்தின் அளவு:
Flashback:-Sila-Nerangalil-Sila-Manithargal-is-the-first-Tamil-art-film-to-run-for-over-100-days


எழுத்தாளர் ஜெயகாந்தன் தனது “அக்னி பிரவேசம்” என்ற சிறுகதை, “சில நேரங்களில் சில மனிதர்கள்” என்ற நாவல் இரண்டினையும் இணைத்து அதற்கு 'ட்ரீட்மெண்ட்' எழுதி, ஒரு ஸ்கிரிப்ட் தயார் செய்து கொடுக்க, இயக்குநர் ஏ பீம்சிங் அதனைத் தயாரித்து இயக்கியிருந்த திரைப்படம்தான் “சில நேரங்களில் சில மனிதர்கள்”.

ஒரு பலவீனமான நேரத்தில் யாரோ ஒருவனிடம் தன்னையிழந்து, பின் தன்னம்பிக்கையோடு படித்து முன்னேறி பணிபுரிந்து கொண்டிருக்கும் நாயகி ஒருநாள் அந்த யாரோ ஒருவனை மீண்டும் சந்திக்கும் நிலை ஏற்பட்டு, அவனை தன் நண்பனாக பாவித்து வாழும் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடிகை லட்சுமியும், பிரபு என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஸ்ரீகாந்தும் நடித்திருந்தனர். முதலில் இந்த கதாபாத்திரங்களின் தேர்வாக இருந்தவர்கள் ஜெயலலிதாவும், நடிகர் ஆர் முத்துராமனும்தான். பின் ஜெயகாந்தனின் விருப்பத்திற்கிணங்க நடிகை லட்சுமியும், நடிகர் ஸ்ரீகாந்தும் தேர்வாயினர்.

நான் கதை எழுதுகிறவன் மட்டுமல்ல, லைப்ரரியின் அட்டெண்டர் மட்டுமல்ல, அம்மன் சிலைபோல் இருக்கின்ற ஒரு பெண்ணின் கணவன். விக்ரகம்போல் இருக்கும் ஒரு பெண்ணின் தகப்பன். எனக்கா சமூகப் பொறுப்பில்லை என்கிறீர்கள்? என்று கேட்கும் எழுத்தாளர் ஆர் கே வியாக நடிகர் நாகேஷூம், உறவையும், செய்த உதவியையும், கங்காவின் வாழ்வில் என்றோ நடந்தேறிய அந்த விபத்தையும், தனது வயதினையும் சலுகைகளாக எடுத்துக் கொண்டு கங்காவிடம் வேறு ஏதோ ஒன்றை எதிர்பார்க்கும் வெங்கு மாமா என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஒய் ஜி பியும் அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

இத்திரைப்படத்தில் நடித்தமைக்காக அகில இந்திய சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை தட்டிச் சென்றார் நடிகை லட்சுமி. 1977ம் ஆண்டு ஒரு கலைப்படமாக தயாரிக்கப்பட்டு வெளிவந்த இத்திரைப்படம், தமிழகத்தில் 100 நாள்களைக் கடந்து ஓடிய முதல் கலைப்படம் என்ற பெருமைக்கும் உரியதானதுதான் இந்த “சில நேரங்களில் சில மனிதர்கள்” திரைப்படம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக் : தனித்து ஜெயித்த மம்பட்டியான்பிளாஷ்பேக் : தனித்து ஜெயித்த ... 'டாக்ஸிக்' தாமதம் ஏன்? : இயக்குனர் விளக்கம் 'டாக்ஸிக்' தாமதம் ஏன்? : இயக்குனர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in