நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

1983ம் ஆண்டு கமலுக்கும், ரஜினிக்கும் தொடர் வெற்றிப் படங்கள் வெளிவந்தது. கமலுக்கு 'தூங்காதே தம்பி தூங்காதே' ரஜினிக்கு, 'தங்கமகன்' வெள்ளி விழா படங்களாக அமைந்தது. இளமை காலங்கள், மண்வாசனை, உயிருள்ளவரை உஷா படங்களும் சக்கப்போடு போட்டது.
இந்தக் காலகட்டத்தில்தான், ராஜசேகர் இயக்கத்தில், 'மலையூர் மம்பட்டியான்' படம் வெளியானது. மம்பட்டியான் கதாபாத்திரத்தில் தியாகராஜன் நடித்தார். அவரின் ஹேர் ஸ்டைலும், தாடியும், கண்களும் அவரது குரலும் மம்மட்டியான் கேரக்டருக்கு கச்சிதமாக அமைந்தது.
படத்தின் நாயகி சரிதா. மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார். கரகாட்ட கலைஞராக சில்க் சுமிதா கவர்ச்சியாகவும், கண்ணீரை வரவழைக்கும் முடிவாகவும் நடித்திருந்தார். கவுண்டமணியின் வில்லத்தனம் ரசிக்க வைத்தது. இளையராஜாவின் இசையில் எல்லாப் பாடல்களும் சூப்பர் ஹிட்டானது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதே மாதிரியான படங்கள் வந்தது. கொம்பேரி மூக்கன், கும்பக்கரை தங்கையா, கரிமேடு கருவாயன், கோவில்பட்டி வீரலட்சுமி என நாட்டுப்புற சாகச கதைகள் படமானது.