தணிக்கையில் ‛யு' சான்றிதழ் பெற்ற ‛வித் லவ்' | பழைய காதல் பிரேக்கப் குறித்து பேசிய மிருணாள் தாக்கூர் | 2வது சிம்பொனி: அப்டேட் கொடுத்த இளையராஜா | அஜித்தின் 64வது படத்தை தயாரிக்கும் ஏகே நிறுவனம் | ஜனநாயகனைத் தொடர்ந்து அடுத்த பட வேலைகளில் இறங்கிய வினோத் | இது புதிய இந்தியா : துரந்தர் 2 படத்தின் டீசர் வெளியானது | மீண்டும் ஒரு போராளி கதாபாத்திரத்தில் அதர்வா | மழை மனிதன் ஆக மாறினேன் ; 'துரந்தர்' சுவாரஸ்யம் பகிர்ந்த மாதவன் | திருப்தியுடன் வெளியே வருவீர்கள் : ரஜினி ரசிகர்களுக்கு சிபி சக்கரவர்த்தி வாக்குறுதி | ராமுக்கு என்னதான் ஆச்சு? நம்பிக்கையுடன் பேசிய ஜீத்து ஜோசப் |

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் கீது மோகன்தாஸ். தமிழில் சத்யராஜ் நடித்த 'என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு' படத்தில் சிறுமியாக நடித்திருந்தார். மாதவன் நடித்த 'நளதமயந்தி' படத்தில் நாயகியாக நடித்தார். இது தவிர மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்தியில் நவாசுதீன் சித்திக் நடித்த 'லயர்ஸ் டைஸ்' படத்தை இயக்கியிருந்தார். இப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது. கடைசியாக நிவின் பாலி நடிப்பில் 'மூத்தோன்' என்ற படத்தை இயக்கியிருந்தார்.
இந்த நிலையில், 'கேஜிஎப்' யஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தை இயக்கி வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த ஆண்டு இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். படம் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் தயாராவதால் படப்பிடிப்புக்கு அதிக நாளும், அதிக பட்ஜெட்டும் தேவைப்படுகிறது என்கிறார் கீத்து மோகன்தாஸ்.
இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது ''டாக்ஸிக் படத்திற்கான எங்கள் தொலைநோக்குப் பார்வை இந்தியாவிலும், உலக அளவில் உள்ள பார்வையாளர்களுடன் உண்மையாகவே எதிரொலிக்கும் ஒரு கதையை உருவாக்குவதாகும். கதையின் நுணுக்கங்களை கன்னடம் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் பிரத்யேகமாக படமாக்க நாங்கள் உழைத்துள்ளோம். இது பல்வேறு மொழியில் மற்றும் கலாச்சார பின்னணியில் உள்ள பார்வையாளர்களுக்கு ஒரு நிஜமான அனுபவத்தை உறுதி செய்கிறது.
இரு மொழி இயல்புக்காக விரிவான தயாரிப்பு மற்றும் நீட்டிக்கப்பட்ட படப்பிடிப்பு நாட்கள் தேவைப்பட்டன. தயாரிப்பாளர்கள் ஒரு அதிவேகமான உலகத்தை உருவாக்குவதில் முதலீடு செய்துள்ளனர். இது உயர்தரமிக்க மற்றும் உலகளாவிய இந்திய திறமைசாலிகளின் குழுவை ஒருங்கிணைக்கிறது. இந்த அம்சங்கள் இணைந்து திட்டத்தின் பட்ஜெட் மற்றும் கால அவகாசத்திற்கு பங்களித்துள்ளன. இந்த அம்சங்கள் அனைத்தும் 'டாக்ஸிக்'கை இன்று வரை மிகவும் விலை உயர்ந்த இந்திய தயாரிப்புகளில் ஒன்றாக நிலை நிறுத்தி இருக்கிறது. என்றார்.