இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் கீது மோகன்தாஸ். தமிழில் சத்யராஜ் நடித்த 'என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு' படத்தில் சிறுமியாக நடித்திருந்தார். மாதவன் நடித்த 'நளதமயந்தி' படத்தில் நாயகியாக நடித்தார். இது தவிர மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்தியில் நவாசுதீன் சித்திக் நடித்த 'லயர்ஸ் டைஸ்' படத்தை இயக்கியிருந்தார். இப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது. கடைசியாக நிவின் பாலி நடிப்பில் 'மூத்தோன்' என்ற படத்தை இயக்கியிருந்தார்.
இந்த நிலையில், 'கேஜிஎப்' யஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தை இயக்கி வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த ஆண்டு இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். படம் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் தயாராவதால் படப்பிடிப்புக்கு அதிக நாளும், அதிக பட்ஜெட்டும் தேவைப்படுகிறது என்கிறார் கீத்து மோகன்தாஸ்.
இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது ''டாக்ஸிக் படத்திற்கான எங்கள் தொலைநோக்குப் பார்வை இந்தியாவிலும், உலக அளவில் உள்ள பார்வையாளர்களுடன் உண்மையாகவே எதிரொலிக்கும் ஒரு கதையை உருவாக்குவதாகும். கதையின் நுணுக்கங்களை கன்னடம் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் பிரத்யேகமாக படமாக்க நாங்கள் உழைத்துள்ளோம். இது பல்வேறு மொழியில் மற்றும் கலாச்சார பின்னணியில் உள்ள பார்வையாளர்களுக்கு ஒரு நிஜமான அனுபவத்தை உறுதி செய்கிறது.
இரு மொழி இயல்புக்காக விரிவான தயாரிப்பு மற்றும் நீட்டிக்கப்பட்ட படப்பிடிப்பு நாட்கள் தேவைப்பட்டன. தயாரிப்பாளர்கள் ஒரு அதிவேகமான உலகத்தை உருவாக்குவதில் முதலீடு செய்துள்ளனர். இது உயர்தரமிக்க மற்றும் உலகளாவிய இந்திய திறமைசாலிகளின் குழுவை ஒருங்கிணைக்கிறது. இந்த அம்சங்கள் இணைந்து திட்டத்தின் பட்ஜெட் மற்றும் கால அவகாசத்திற்கு பங்களித்துள்ளன. இந்த அம்சங்கள் அனைத்தும் 'டாக்ஸிக்'கை இன்று வரை மிகவும் விலை உயர்ந்த இந்திய தயாரிப்புகளில் ஒன்றாக நிலை நிறுத்தி இருக்கிறது. என்றார்.