தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி |
மலையாளத்தில் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரங்களில் வித்தியாசமான நடிப்பை வழங்கி பின்னர் கதையின் நாயகனாகவும் மாறியவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. தெலுங்கில் 'தசரா' படத்தில் வில்லனாக நடித்த இவர் தமிழில் விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தில் ஒரு சிறிய வில்லன் வேடத்தில் நடித்து, பின்னர் படம் குறித்தும் விஜய் குறித்தும் விமர்சித்து சர்ச்சையில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியவர்.
இந்த நிலையில் தற்போது 'சூத்திர வாக்கியம்' என்கிற மலையாள படத்தில் நடித்து வருகிறார் ஷைன் டாம் சாக்கோ. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கேரளாவில் மலப்புரம் அருகே உள்ள எடப்பால்-பொன்னானி சாலையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஷைன் டாம் சாக்கோ. காலை 10 மணி அளவில் அங்கே சாலையில் அவர் நிற்பது போன்று ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அந்த சமயம் அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் ஷைன் டாம் சாக்கோவை தூரத்தில் இருந்து பார்த்ததும் போலீசாரின் வாகன சோதனை தான் நடக்கிறதோ என்று எண்ணி சடன் பிரேக் போட்டு உள்ளார்.
மழையால் ஈரமாகியிருந்த சாலை என்பதால் சடன் பிரேக்கால் தடுமாறிய வாகனம், நிலை தடுமாறி கீழே விழுந்ததில் இளைஞருக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக ஓடி வந்த ஷைன் டாம் சாக்கோ, அந்த வாலிபரை தூக்கிவிட்டு உதவியதுடன் அவரை அதே இரு சக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனையிலும் தானே கொண்டு போய் சேர்த்தார். மறக்காமல் அந்த இளைஞருடன் செல்பியும் எடுத்துக் கொண்டார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.