சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

மலையாள திரையுலகில் கடந்த சில வருடங்களில் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராகவும் சமீப நாட்களில் கதையின் நாயகனாகவும் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருபவர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். இவர் கதையின் நாயகனாக நடித்த ஜோசப் மற்றும் தானே இயக்கி நடித்த பணி என இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இன்னொரு பக்கம் தமிழில் கடந்த சில மாதங்களில் வெளியான ரெட்ரோ மற்றும் தக் லைப் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது பிரபல மலையாள கமர்சியல் இயக்குனர் ஷாஜி கைலாஷ் டைரக்சனில் உருவாகி வரும் 'வரவு' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் ஜோஜூ ஜார்ஜ். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மூணாறு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டு லொகேஷனில் இருந்து தங்குமிடத்திற்கு திரும்பிய போது அவரும் படக்குழுவினர் மூன்று பேரும் பயணித்த ஜீப் ஒன்று திடீரென எதிர்பாராத விதமாக விபத்துக்கு உள்ளானது. சிறிய காயங்களுடன் ஜோஜூ ஜார்ஜ் மற்றும் உடன் வந்தவர்கள் உயிர் தப்பினாலும் மூணாறில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டனர். படப்பிடிப்பும் திங்கள் முதல் வழக்கம்போல தடையின்றி தொடர்ந்து நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.