மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் |
கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதில் நடித்த 10க்கும் மேற்பட்ட நடிகர்களுக்கு மிகப்பெரிய புகழ் வெளிச்சத்தையும் தேடித்தந்தது. அந்த பத்து நடிகர்களில் ஒருவராக நடித்திருந்தவர் நடிகர் கணபதி. இவர் கடந்த சனியன்று நள்ளிரவில் கேரளாவில் உள்ள அங்கமாலி என்கிற இடத்தில் இருந்து கலமசேரி என்கிற இடத்திற்கு கார் ஓட்டி சென்றுள்ளார். சிக்னல்களை மதிக்காமல் வெகு வேகமாக அவர் ஓட்டிச் சென்ற காரை அத்தாணி மற்றும் ஆலுவா உள்ளிட்ட இடங்களில் போலீசார் நிறுத்த சொல்லியும் அவர் நிறுத்தாமல் சென்றுள்ளார்.
ஒரு வழியாக அவரை கலமசேரியில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் அவர் மீது விதிமீறல்களுக்காகவும் மது போதையில் வாகனம் ஓட்டியதற்காகவும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். சமீப காலமாக இப்படி மலையாளத்தில் பல இளம் நடிகர்கள் மதுபோதையில் வாகனம் ஓட்டுவதும் அதனால் அடிக்கடி விபத்துக்களை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்குவதும் தொடர்கதையாகி வருகிறது.