நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், விஜயின் 'மாஸ்டர்' பட தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் மருமகனுமான ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் படம் 'நேசிப்பாயா'. இப்படத்தை இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க, பிரபு, சரத்குமார், குஷ்பு, கல்கி கொச்சலின் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்.எஸ்.சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்தின் இணை தயாரிப்பாளராக சினேகா பிரிட்டோ பணியாற்றியுள்ளார். இவர் ஆகாஷின் மனைவியாவார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு பிரிட்டிஷ் ஒளிப்பதிவாளர் கேமரோன் பிரைசன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பு செய்ய, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெட்ரிகோ கியூவா சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
படம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குனர் விஷ்ணுவர்தன் கூறியதாவது: 'நேசிப்பாயா' முழுக்க முழுக்க காதல் படம். காதல் என்பதை ஒரு களமாக வைத்துக்கொண்டு, இளைஞர்களுக்கான ஒரு படமாக மட்டும் இன்றி திரைப்பட ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம் விறுவிறுப்பான படத்தை எடுத்திருக்கிறேன்.
நேசிப்பாயா எப்படி தொடங்கியது என்றால், 'ஷெர்ஷா' படத்தின் டப்பிங் பணிகளில் நான் பிஸியாக இருந்த போது, என்னை ஆகாஷ் மும்பையில் நட்பு ரீதியாக சந்தித்தார். அப்போது அவரை வைத்து படம் இயக்கும் ஐடியா என்னிடம் இல்லை. இப்படி ஒரு கரு என்னிடம் இருந்தது. வாய்ப்பு கிடைத்தால் இதை படமாக பண்ணலாம் என்று நினைத்தேன், ஆகாஷுக்காக படம் பண்ண முடிவான போது, ஏன் இந்த கதையை பண்ணக்கூடாது என்று தோன்றியது. அதனால் தான் இந்த கதையை தேர்வு செய்தேன்.
இதன் கதை தமிழகத்தில் துவங்கினாலும், 90 சதவீதம் போர்ச்சுக்கல் நாட்டில் நடக்கிறது. கதைப்படி, மொழி தெரியாத ஒரு நாடு தேவைப்பட்டதால் போர்ச்சுக்கல்லில் படமாக்கினோம். ஒளிப்பதிவாளராக பிரிட்டிஷை சேர்ந்த கேமரோன் பிரைசன், சண்டை இயக்குனராக ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெட்ரிகோ பணியாற்றி இருக்கிறார்கள். இவர்கள் பணிகளும் பாராட்டும்படி இருக்கும்.
அஜித்
நடிகர் அஜித்குமாருடன் பில்லா, ஆரம்பம் படங்களை இயக்கிய பிறகு, 2, 3 முறை மீண்டும் இணைந்து படம் இயக்க வாய்ப்பு ஏற்பட்டு மிஸ் ஆகிவிட்டது. ஒருமுறை அவர்கள் அழைத்தபோது, எனக்கு பாலிவுட்டில் சல்மான் கானுடன் படம் எடுக்கும் சூழல் இருந்ததால் முடியாமல் போனது. பில்லா 3 படம் எடுக்க எனக்கு அழைப்பு வந்தது; வேண்டாம் என விட்டுவிட்டேன். மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் அஜித்தை இயக்க ஆசை. இவ்வாறு அவர் கூறினார்.