சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

மும்பை : மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இதில், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக், 66, என்பவர் சமீபத்தில் கொல்லப்பட்டார்.
இந்த கொலைக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலே காரணம் என்றும், ஏற்கனவே பாலிவுட் நடிகர் சல்மான் கானுடன் நெருக்கமாக இருந்ததால், அவரை சுட்டுக் கொன்றதாகவும் தகவல் வெளியானது. இதுவரை 15க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, சல்மான் கான் மற்றும் பாபா சித்திக் மகன் ஜிஷானுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக, உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் 20 வயது இளைஞரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர், மும்பை போக்குவரத்து போலீசாரின் உதவி எண் வாயிலாக மிரட்டல் விடுத்தார். அதில், 'நடிகர் சல்மான் கான் எனக்கு 2 கோடி ரூபாய் அளிக்காவிட்டால், நான் அவரை கொலை செய்து விடுவேன்' என, குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், மிரட்டல் விடுத்த மும்பையின் பாந்த்ரா பகுதியைச் சேர்ந்த அசம் முகமது முஸ்தபா, 56, என்பவரை கைது செய்தனர்.




