சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

அயோத்தியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக சமீபத்தில் திறக்கப்பட்டது. தினமும் ஏராளமான பக்தர்கள் அங்கு சென்று வருகின்றனர். அயோத்தியில் நிறைய குரங்குகள் உள்ளதால் அங்கு இன்னும் அதிக கவனிப்புடன் பராமரிக்கப்படுகின்றன. அன்றாடம் அளவுக்கதிகமான குரங்குகளுக்கு தினமும் நேரத்திற்கு உணவு கிடைப்பதில் சிக்கல் உள்ளது. உணவு இல்லாததால் அவை அங்கு செல்லும் பக்தர்களுக்கு தொல்லை கொடுத்து வந்தன.
இதை கருத்தில் கொண்டு அயோத்தி கோவிலில், ஜகத்குரு ஸ்வாமி ராகவாச்சார்யா ஜி மகராஜின் வழிகாட்டுதலின் கீழ் ஆஞ்சநேய சேவா என்ற அறக்கட்டளை குரங்களுக்கு உணவளிக்கும் முயற்சியையும் நடைபெற்று வருகிது. இதில் தற்போது, பாலிவுட் நடிகரான அக்ஷய் குமாரும் இணைந்துள்ளார். இவர், அயோத்தியில் உள்ள குரங்குகளுக்கு உணவளிப்பதற்காக ரூ.1 கோடியை நன்கொடையாக அறக்கட்டளை மூலம் வழங்கியுள்ளார்.




