‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
மும்பை : மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இதில், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக், 66, என்பவர் சமீபத்தில் கொல்லப்பட்டார்.
இந்த கொலைக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலே காரணம் என்றும், ஏற்கனவே பாலிவுட் நடிகர் சல்மான் கானுடன் நெருக்கமாக இருந்ததால், அவரை சுட்டுக் கொன்றதாகவும் தகவல் வெளியானது. இதுவரை 15க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, சல்மான் கான் மற்றும் பாபா சித்திக் மகன் ஜிஷானுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக, உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் 20 வயது இளைஞரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர், மும்பை போக்குவரத்து போலீசாரின் உதவி எண் வாயிலாக மிரட்டல் விடுத்தார். அதில், 'நடிகர் சல்மான் கான் எனக்கு 2 கோடி ரூபாய் அளிக்காவிட்டால், நான் அவரை கொலை செய்து விடுவேன்' என, குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், மிரட்டல் விடுத்த மும்பையின் பாந்த்ரா பகுதியைச் சேர்ந்த அசம் முகமது முஸ்தபா, 56, என்பவரை கைது செய்தனர்.