எந்த மாற்றமும் தெரியவில்லை : கீர்த்தி சுரேஷ் | ராம்சரணின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்! | வருகிற மார்ச் 24ம் தேதி நாகார்ஜுனா - அமலா தம்பதியின் மகன் அகில் திருமணம்! | இது சாமி விஷயம்- நறுக் பதில் கொடுத்த யோகி பாபு! | என்னை வியக்க வைத்த தனுஷ் - சேகர் கம்முலா! | 'நிறம் மாறும் உலகில்' படத்தில் 4 கதைகள் | பிளாஷ்பேக் : ஒரே ஹாலிவுட் படத்தை காப்பி அடித்து உருவான இரண்டு தமிழ் படங்கள் | பிளாஷ்பேக் : சொக்கலிங்கம் 'பாகவதர்' ஆனது இப்படித்தான் | சாய் பல்லவிக்கு கிடைத்த ஆசீர்வாதம்! | இந்தியா பசுமையை இழந்து விட்டதால் நியூசிலாந்தில் 'கண்ணப்பா'வை படமாக்கினோம் : விஷ்ணு மஞ்சு |
மும்பை : மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இதில், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக், 66, என்பவர் சமீபத்தில் கொல்லப்பட்டார்.
இந்த கொலைக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலே காரணம் என்றும், ஏற்கனவே பாலிவுட் நடிகர் சல்மான் கானுடன் நெருக்கமாக இருந்ததால், அவரை சுட்டுக் கொன்றதாகவும் தகவல் வெளியானது. இதுவரை 15க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, சல்மான் கான் மற்றும் பாபா சித்திக் மகன் ஜிஷானுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக, உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் 20 வயது இளைஞரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர், மும்பை போக்குவரத்து போலீசாரின் உதவி எண் வாயிலாக மிரட்டல் விடுத்தார். அதில், 'நடிகர் சல்மான் கான் எனக்கு 2 கோடி ரூபாய் அளிக்காவிட்டால், நான் அவரை கொலை செய்து விடுவேன்' என, குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், மிரட்டல் விடுத்த மும்பையின் பாந்த்ரா பகுதியைச் சேர்ந்த அசம் முகமது முஸ்தபா, 56, என்பவரை கைது செய்தனர்.