சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛அமரன்'. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். இம்மாதம் 31ம் தேதி தீபாவளிக்கு இப்படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது.
அப்போது பேசிய சிவகார்த்திகேயன், ‛‛நான் சிறுவயதில் இருந்தே ரஜினிகாந்த்தின் மிகப்பெரிய ரசிகன். இது கமல் சாருக்கும் நல்லா தெரியும். ஆனபோதும் இவனிடத்தில் நடிப்பு திறமை உள்ளது. இவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம் என்று என்னை வைத்து இந்த படத்தை அவர் தயாரித்திருக்கிறார். அதேபோல் இந்த படம் திரைக்கு வந்த முதல் நாளில் ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு கட்டாயமாக பாராட்டு தெரிவிப்பார். அந்த அளவுக்கு இந்த படம் சிறப்பாக உருவாகி இருக்கிறது. அதோடு கோலிவுட் சினிமாவில் அபூர்வ சகோதரர்கள் என்றால் அது கமலும், ரஜினியும் தான்'' என்றும் நெகிழ்ச்சியுடன் பேசினார் சிவகார்த்திகேயன்.