5 கோடி பார்வையாளர்களைக் கடந்த ‛கோல்டன் ஸ்பாரோ' பாடல் | விஜய் 69 பட கதை தொடர்பாக வெளியான தகவல் | காலை 6.34 மணிக்கே சர்தார் 2 படப்பிடிப்புக்கு சென்ற மாளவிகா மோகனன்! | என் வெற்றிக்கு காரணம் அஜித் தான் : யுவன் | பிளாஷ்பேக் : மதுவின் தீமையை விளக்கிச் சொன்ன மகத்துவமிக்க கவிஞன் 'கவியரசர்' கண்ணதாசன் | ‛பார்க்கிங்' பட இயக்குனர் உடன் இணையும் சிவகார்த்திகேயன் | ஜெயம் ரவி 34வது படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம் | 4வது திருமணம் செய்த நடிகர் பாலா: முறைப்பெண்ணை மணந்தார் | ‛ஸ்டார்' படத்தில் நான் சொன்னது தான் நடந்தது - கவின் ஓபன் டாக் | கன்னத்தில் முத்தமிட்டால் படத்தை தவறவிட்ட பூமிகா |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛அமரன்'. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். இம்மாதம் 31ம் தேதி தீபாவளிக்கு இப்படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது.
அப்போது பேசிய சிவகார்த்திகேயன், ‛‛நான் சிறுவயதில் இருந்தே ரஜினிகாந்த்தின் மிகப்பெரிய ரசிகன். இது கமல் சாருக்கும் நல்லா தெரியும். ஆனபோதும் இவனிடத்தில் நடிப்பு திறமை உள்ளது. இவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம் என்று என்னை வைத்து இந்த படத்தை அவர் தயாரித்திருக்கிறார். அதேபோல் இந்த படம் திரைக்கு வந்த முதல் நாளில் ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு கட்டாயமாக பாராட்டு தெரிவிப்பார். அந்த அளவுக்கு இந்த படம் சிறப்பாக உருவாகி இருக்கிறது. அதோடு கோலிவுட் சினிமாவில் அபூர்வ சகோதரர்கள் என்றால் அது கமலும், ரஜினியும் தான்'' என்றும் நெகிழ்ச்சியுடன் பேசினார் சிவகார்த்திகேயன்.