கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛அமரன்'. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். இம்மாதம் 31ம் தேதி தீபாவளிக்கு இப்படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது.
அப்போது பேசிய சிவகார்த்திகேயன், ‛‛நான் சிறுவயதில் இருந்தே ரஜினிகாந்த்தின் மிகப்பெரிய ரசிகன். இது கமல் சாருக்கும் நல்லா தெரியும். ஆனபோதும் இவனிடத்தில் நடிப்பு திறமை உள்ளது. இவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம் என்று என்னை வைத்து இந்த படத்தை அவர் தயாரித்திருக்கிறார். அதேபோல் இந்த படம் திரைக்கு வந்த முதல் நாளில் ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு கட்டாயமாக பாராட்டு தெரிவிப்பார். அந்த அளவுக்கு இந்த படம் சிறப்பாக உருவாகி இருக்கிறது. அதோடு கோலிவுட் சினிமாவில் அபூர்வ சகோதரர்கள் என்றால் அது கமலும், ரஜினியும் தான்'' என்றும் நெகிழ்ச்சியுடன் பேசினார் சிவகார்த்திகேயன்.