மாரீசன் படம் ஜூலை மாதம் வெளியாகிறது | ஊட்டி பூங்காக்களில் சினிமா படப்பிடிப்புக்கு தடை | ஓடிடியில் ஜொலிக்குமா யோகி பாபுவின் 'லெக் பீஸ்' | இளம் பெண் பலாத்காரம்: பாலிவுட் இயக்குனர் கைது | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் கடவுளாக நடித்த சிவாஜி, ரஜினி, கமல் | அதிரடி காட்டும் விமலின் ஓம் காலி ஜெய் காளி | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் நடிக்க, கருணாநிதி வசனம் எழுதிய புராண படம் | வீர தீர சூரன் 5 நாள் வசூல் முழு விவரம் | சர்ச்சைகளுக்கிடையில் 200 கோடி வசூல் கடந்த 'எல் 2 எம்புரான்' | பிளாஷ்பேக்: “படித்த பெண்” திரைப்படப் பாடலும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் |
ரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்து திரைக்கு வந்த படம் நந்தன். தற்போது லண்டனில் இருக்கும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இந்த படத்தை ஓடிடி தளத்தில் பார்த்துவிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அந்த பதிவில், ‛ஓடிடி தளத்தில் நந்தன் படத்தை பார்த்தேன். பட்டியலின மக்களை முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் தங்கள் சுய லாபத்திற்காக பட்டியலின மக்களை சுரண்டி ஆட்சி செய்யும் சர்வாதிகார அரசியல்வாதிகளை தோலுரித்துக் காட்டியிருக்கிறது இந்த படம்.
தனது சிறப்பான நடிப்பின் மூலம் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்கள் படும் இன்னல்களை நம் கண் முன் கொண்டு வந்த நடிகர் சகோதரர் சசிகுமாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளில் நடக்கும் அவல அரசியலை உள்ளபடியே காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குனர் ரா.சரவணன்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். பல ஆழமான கருத்துக்கள் நிறைந்த நந்தன் திரைப்படம் காலத்திற்கும் மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்று அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.
அவரது பதிவுக்கு நடிகர் சசிகுமார் நன்றி தெரிவித்து டுவீட் போட்டு உள்ள நிலையில், இயக்குனர் ரா.சரவணனும் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அந்தப் பதிவில், உங்கள் குரலுக்கு எப்போதுமே சக்தி அதிகம் சார். நந்தன் படம் பார்த்து நீங்கள் பதிவிட்ட கருத்து பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் மீதான அக்கறையை பெரிதாக்கி இருக்கிறது. ஒடுக்கு முறைகள் குறித்த விவாதங்களை தீவிரமாக்கி இருக்கிறது. நந்தன் படத்தை பெரிய அளவில் பேசு பொருளாக்கி இருக்கிறது. பயணம் அரசியல், படிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு மத்தியில் நந்தன் படம் பார்த்து கருத்து சொன்னதற்கும், சமூக நீதிக்காக குரலை பெரிதாக்கியதற்கும் மனமார்ந்த நன்றி சார் என்று அவர் பதிவிட்டுள்ளார்.