நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' |

சோசியல் மீடியாவின் தாக்கம் எப்போது அதிகமாக ஆரம்பித்ததோ அப்போதிருந்தே பிரபலங்களின் பெயரால் பல்வேறு விதமான மோசடிகளும் நடக்க தொடங்கிவிட்டன. அதில் பல உண்மை போல தோன்றுவதால் ரசிகர்கள் பலரும் அதை நம்பி ஏமாறுவது உண்டு. இதனால் பிரபலங்கள் இதுபோன்று மோசடிகள் குறித்து தங்களது கவனத்திற்கு வரும்பொழுது உடனுக்குடன் அது குறித்து விளக்கம் அளித்து ரசிகர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பிரபல பின்னணி பாடகி சித்ராவின் பெயரில் சமூக வலைதளம் ஒன்றில் சில மர்ம நபர்கள் பண மோசடி விளம்பரம் ஒன்றை பதிவிட்டுள்ளனர்.
அதாவது அந்த பதிவில் சித்ரா கூறுவது போல, நான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தூதராக இருக்கிறேன் என்றும், இதில் பத்தாயிரம் ரூபாய் டெபாசிட் செய்து பங்குகளைப் பெற்றால் அதன் மதிப்பு ஒரு வாரத்தில் 50 ஆயிரம் வரை உயரும் என்றும் அதில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் ரசிகர்களுக்கு ஐ போன் பரிசாக தருவதாகவும் அதில் சொல்லப்பட்டிருந்தது. இந்த விளம்பரம் குறித்து தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாக கேள்விப்பட்ட சித்ரா உடனடியாக, இது தன்னுடைய பெயரை பயன்படுத்தி நடக்கும் மோசடி என்றும், இதில் யாரும் ஏமாற வேண்டாம் என்றும் இந்த போலி விளம்பரம் குறித்து ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்துள்ளார்.