அன்புள்ள அப்பா சூப்பர் லுக்- ஸ்ருதிஹாசன் வெளியிட்ட கமெண்ட்! | சிங்கப்பூர் சிவாஜி மாரடைப்பால் மரணம் : சிவாஜி போன்று நடனமாடியபடியே உயிர் துறந்தார் | அஜித் படம் விரைவில் துவங்கும்: சிறுத்தை சிவா கொடுத்த 'அப்டேட்' | 'கங்குவா' 2000 கோடி வசூலிக்குமா?! - அதிர்ச்சியடையும் ரசிகர்கள்… | ஓமஹாவில் ரஜினிகாந்தின் 'வேட்டையன்' : திருவிழாவாக கொண்டாடிய ரசிகர்கள் | 2024ம் ஆண்டின் 7வது 100 கோடி படம் 'வேட்டையன்' | உண்மைச் சம்பவத்தை அலசும் “அலங்கு” | உலக சாதனை படைத்த குக் வித் கோமாளி புகழின் மகள் | சண்டை காட்சியில் ரிஸ்க் எடுத்த கேப்ரில்லா | அன்று 'அஞ்சான்' படத்தை கிண்டலடித்தவர் : இன்று சூர்யாவின் இயக்குனர் |
சோசியல் மீடியாவின் தாக்கம் எப்போது அதிகமாக ஆரம்பித்ததோ அப்போதிருந்தே பிரபலங்களின் பெயரால் பல்வேறு விதமான மோசடிகளும் நடக்க தொடங்கிவிட்டன. அதில் பல உண்மை போல தோன்றுவதால் ரசிகர்கள் பலரும் அதை நம்பி ஏமாறுவது உண்டு. இதனால் பிரபலங்கள் இதுபோன்று மோசடிகள் குறித்து தங்களது கவனத்திற்கு வரும்பொழுது உடனுக்குடன் அது குறித்து விளக்கம் அளித்து ரசிகர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பிரபல பின்னணி பாடகி சித்ராவின் பெயரில் சமூக வலைதளம் ஒன்றில் சில மர்ம நபர்கள் பண மோசடி விளம்பரம் ஒன்றை பதிவிட்டுள்ளனர்.
அதாவது அந்த பதிவில் சித்ரா கூறுவது போல, நான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தூதராக இருக்கிறேன் என்றும், இதில் பத்தாயிரம் ரூபாய் டெபாசிட் செய்து பங்குகளைப் பெற்றால் அதன் மதிப்பு ஒரு வாரத்தில் 50 ஆயிரம் வரை உயரும் என்றும் அதில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் ரசிகர்களுக்கு ஐ போன் பரிசாக தருவதாகவும் அதில் சொல்லப்பட்டிருந்தது. இந்த விளம்பரம் குறித்து தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாக கேள்விப்பட்ட சித்ரா உடனடியாக, இது தன்னுடைய பெயரை பயன்படுத்தி நடக்கும் மோசடி என்றும், இதில் யாரும் ஏமாற வேண்டாம் என்றும் இந்த போலி விளம்பரம் குறித்து ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்துள்ளார்.