தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சோசியல் மீடியாவின் தாக்கம் எப்போது அதிகமாக ஆரம்பித்ததோ அப்போதிருந்தே பிரபலங்களின் பெயரால் பல்வேறு விதமான மோசடிகளும் நடக்க தொடங்கிவிட்டன. அதில் பல உண்மை போல தோன்றுவதால் ரசிகர்கள் பலரும் அதை நம்பி ஏமாறுவது உண்டு. இதனால் பிரபலங்கள் இதுபோன்று மோசடிகள் குறித்து தங்களது கவனத்திற்கு வரும்பொழுது உடனுக்குடன் அது குறித்து விளக்கம் அளித்து ரசிகர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பிரபல பின்னணி பாடகி சித்ராவின் பெயரில் சமூக வலைதளம் ஒன்றில் சில மர்ம நபர்கள் பண மோசடி விளம்பரம் ஒன்றை பதிவிட்டுள்ளனர்.
அதாவது அந்த பதிவில் சித்ரா கூறுவது போல, நான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தூதராக இருக்கிறேன் என்றும், இதில் பத்தாயிரம் ரூபாய் டெபாசிட் செய்து பங்குகளைப் பெற்றால் அதன் மதிப்பு ஒரு வாரத்தில் 50 ஆயிரம் வரை உயரும் என்றும் அதில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் ரசிகர்களுக்கு ஐ போன் பரிசாக தருவதாகவும் அதில் சொல்லப்பட்டிருந்தது. இந்த விளம்பரம் குறித்து தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாக கேள்விப்பட்ட சித்ரா உடனடியாக, இது தன்னுடைய பெயரை பயன்படுத்தி நடக்கும் மோசடி என்றும், இதில் யாரும் ஏமாற வேண்டாம் என்றும் இந்த போலி விளம்பரம் குறித்து ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்துள்ளார்.