2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

தமிழில் மிஸ்கின் இயக்கிய பிசாசு படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை பிரயாகா மார்ட்டின். தொடர்ந்து மலையாள படங்களில் பிசியான கதாநாயகியாக நடித்து வருகிறார். பிரபல தாதாவான ஓம் பிரகாஷ் என்பவர் போதை பொருள் மற்றும் மது கடத்திய குற்றத்திற்காக சமீபத்தில் கேரளாவில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். அங்கே தங்கியிருந்த நாட்களில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அங்கு நடந்த பார்ட்டி ஒன்றில் நடிகை பிரயாகா மார்ட்டின் மற்றும் இளம் நடிகர் ஸ்ரீநாத் பாஷி ஆகியோர் கலந்து கொண்டதாக ஒரு தகவல் வெளியானது. இதனால் போலீசார் இவர்கள் இருவரையும் விசாரணை செய்ய இருக்கிறார்கள் என்றும் செய்தி வெளியானதால் மலையாள திரையுலகில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் உடனடியாக இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பிரயாகா மார்ட்டின், “அன்று நான் அந்த ஹோட்டலுக்கு சென்றது உண்மை. அங்கே பார்ட்டி நடந்தது உண்மை. ஆனால் அது என்னுடைய நண்பர்கள் என்னை அழைத்திருந்த பார்ட்டி. அங்கே அவர்களுடன் சேர்ந்து கொண்டாடிவிட்டு அதன்பிறகு சில மணி நேரங்களில் நான் வந்தே பாரத் ரயிலைப் பிடித்து வெளியூருக்கு செல்ல வேண்டியிருந்ததால் நண்பர்களின் அறையிலேயே இரண்டு மணி நேரம் தங்கியிருந்து விட்டு கிளம்பினேன்.
ஆனால் துரதிஷ்டவசமாக இப்படி ஒரு நபர் அந்த ஹோட்டலில் அப்போது இருந்தார் என்பது எனக்கு தெரியாது. இன்னும் சொல்லப்போனால் என்னிடம் இது பற்றிய பேட்டி வேண்டும் என மீடியாக்கள் கேட்டபோதுதான் சம்பந்தப்பட்ட அந்த தாதாவின் பெயரையே நான் முதன்முதலாக கேள்விப்பட்டேன். இந்த விஷயத்தில் இதுதான் உண்மையாக நடந்தது” என்று கூறியுள்ளார்.