'சூர்யா 45' படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புதிய தோற்றத்தில் கமல் : அடுத்த படத்திற்கு தயார் | நான்கு நாட்களில் ரூ.240 கோடி வசூல் செய்த வேட்டையன்! | அமரன் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிம்பு! | முன்னாள் மனைவியின் புகார் எதிரொலி- நடிகர் பாலா திடீர் கைது!! | அந்தரங்க வீடியோ லீக்... அவமானத்தில் முடிந்த அதீத நட்பு : போலீஸில் ஓவியா புகார் | கங்குவா படத்திற்காக ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் தயாரிப்பாளர் | எந்த சூழலிலும் யாருக்கும் பயப்பட மாட்டேன் - அடா சர்மா | குபேரா பட ரிலீஸ் குறித்து புதிய தகவல் இதோ! | தனுஷின் 'இட்லி கடை'யில் இணைந்த நித்யா மேனன், அருண் விஜய் |
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் நாளை (அக்-10) வெளியாக இருக்கிறது. தனது இரண்டாவது படத்திலேயே ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பை பெற்றதுடன் 30 வருடங்களுக்குப் பிறகு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனையும், ரஜினியையும் இந்த படத்தில் மீண்டும் இணைந்து நடிக்க வைத்த பெருமையும் பெற்றுள்ளார் இயக்குநர் ஞானவேல்.
சில நாட்களாக தொடர்ந்து இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் இயக்குனர் ஞானவேல் சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவருக்கான நடிப்பு ஒப்பீடு குறித்து நகைச்சுவையாக பேசினார்.
இது குறித்து அவர் பேசும்போது, “நடிகர் அமிதாப் பச்சனை பொறுத்தவரை அவர் ஒரு பர்ஸ்ட் பெஞ்ச் ஸ்டுடென்ட் போல. முதல் நாளே அவர் நடிக்க வேண்டிய காட்சிகளுக்கான பேப்பர்களை வாங்கிக் கொண்டு அதற்காக பக்காவாக தயாராகி வந்து மறுநாள் நாம் என்ன எதிர்பார்த்தோமோ அதை அப்படியே அழகாக கேமரா முன் செய்து விட்டு போவார். அதேசமயம் நடிகர் ரஜினிகாந்த் லாஸ்ட் பென்ச் ஸ்டுடென்ட் போல.. ரிகர்சல் எல்லாம் பார்க்க மாட்டார். ஷாட்டுக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தான் தனக்கான வசன பேப்பர்களை வாங்கி பார்ப்பார். பின் அவர் அதை மனதில் உள்வாங்கி தனது பாணியில் நடிப்பாக வெளிப்படுத்தும்போது அதில் ஒரு மேஜிக்கே நடக்கும்” என்று சிலாகித்துக் கூறியுள்ளார்.