ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
ரஜினிகாந்த் நடித்த 'கூலி' படம் பத்து நாட்களுக்கு முன்பு வெளியாகி தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை அடுத்து அவர் நடித்து வரும் 'ஜெயிலர் 2' படம் அடுத்த ஆண்டில் வெளியாக உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும்.
இதற்கடுத்து ரஜினி யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 'கூலி' வெளியீட்டிற்குப் பின்பு, லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள படத்தில் ரஜினி, கமல் இணைந்து நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றிய அறிவிப்பு வரும் வரை அது உறுதி இல்லை.
இதனிடையே, தெலுங்கு இயக்குனரான நாக் அஷ்வின் சமீபத்தில் ரஜினிகாந்த்தை சந்தித்து ஒரு கதையைக் கூறியுள்ளார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. முழு திரைக்கதையையும் ரஜினி கேட்டுள்ளாராம். அது அவருக்குப் பிடித்திருந்தால் படம் ஆரம்பமாகலாம். நாக் அஷ்வின் அடுத்து 'கல்கி 2989 ஏடி' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வேண்டும். ஆனால், அப்படம் தாமதமாகி வருகிறது. வேறு சில தெலுங்கு இயக்குனர்களும், தமிழ் இயக்குனர்களும் ரஜினியை சந்தித்து கதை சொல்லி உள்ளார்கள். ஆனால், ரஜினி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்கிறார்கள்.