ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
2025 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா', ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள 'அடங்காதே' ஆகிய படங்கள் ஆகஸ்ட் 27ம் தேதியும், அதர்வா நடித்துள்ள 'தணல்' படம் ஆகஸ்ட் 29ம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் படங்கள் வருமா, வராதா என்பது பற்றி எந்தவிதமான அப்டேட்டும் இல்லை. கடந்த சில நாட்களாக எந்த விளம்பரங்களும் வரவில்லை என்பதால் நிச்சயம் இந்தப் படங்கள் வெளிவராது.
அதேசமயம், ஆகஸ்ட் 27ல் கடுக்கா என்ற படம் மட்டும் வெளியாகிறது. ஆகஸ்ட் 29ம் தேதி சில சிறிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. “அசுர மனிதன், கிப்ட், குற்றம் புதிது, நறுவீ, சொட்ட சொட்ட நனையுது, வீர வணக்கம், பேய்கதை ' ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றோடு மலையாளம், தமிழில் தயாராகி உள்ளதாக சொல்லப்படும் 'பல்டி' படமும் அதே நாளில் வெளியாக உள்ளது.
இந்த வாரம் வெளியாகும் படங்களுடன் சேர்த்து இந்த வருடம் இதுவரையில் வெளியான படங்களின் எண்ணிக்கை 170ஐக் கடக்கிறது. இந்த வருடம் முடிய இன்னும் நான்கு மாதங்கள் உள்ள நிலையில் எப்படியும் 75 படங்களாவது வெளியாக வாய்ப்புள்ளது.