நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் |

2025 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா', ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள 'அடங்காதே' ஆகிய படங்கள் ஆகஸ்ட் 27ம் தேதியும், அதர்வா நடித்துள்ள 'தணல்' படம் ஆகஸ்ட் 29ம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் படங்கள் வருமா, வராதா என்பது பற்றி எந்தவிதமான அப்டேட்டும் இல்லை. கடந்த சில நாட்களாக எந்த விளம்பரங்களும் வரவில்லை என்பதால் நிச்சயம் இந்தப் படங்கள் வெளிவராது.
அதேசமயம், ஆகஸ்ட் 27ல் கடுக்கா என்ற படம் மட்டும் வெளியாகிறது. ஆகஸ்ட் 29ம் தேதி சில சிறிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. “அசுர மனிதன், கிப்ட், குற்றம் புதிது, நறுவீ, சொட்ட சொட்ட நனையுது, வீர வணக்கம், பேய்கதை ' ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றோடு மலையாளம், தமிழில் தயாராகி உள்ளதாக சொல்லப்படும் 'பல்டி' படமும் அதே நாளில் வெளியாக உள்ளது.
இந்த வாரம் வெளியாகும் படங்களுடன் சேர்த்து இந்த வருடம் இதுவரையில் வெளியான படங்களின் எண்ணிக்கை 170ஐக் கடக்கிறது. இந்த வருடம் முடிய இன்னும் நான்கு மாதங்கள் உள்ள நிலையில் எப்படியும் 75 படங்களாவது வெளியாக வாய்ப்புள்ளது.