ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் | ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர், சிவாஜியை மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வைக்க விரும்பிய ஏ வி எம் | திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு: தயாரிப்பாளர்கள் குமுறல் | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! |

தமிழில் டிராகன் என்ற ஒரே படத்தில் தான் நடித்து இருக்கிறார் கயாடு லோகர். ஆனாலும் இவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு. அவரை சோஷியல் மீடியாவில் கொண்டாடினார்கள். அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆனார். ஆனால் கொஞ்ச காலத்தில் சர்ச்சையில் அடிபட்டார். சினிமா, பொது நிகழ்ச்சிகளுக்கு வருவதை தவிர்த்தார். இப்போது. மீண்டும் நிகழ்ச்சிகளில் தலை காண்பிக்க தொடங்கியுள்ளர்.
சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய கயாடு, ‛‛இப்போது தமிழ் தெலுங்கு மொழிகளில் 5 படங்களில் நடித்து வருகிறேன். நான் அசாமை சேர்ந்தவள். ஆனால் என் தாய்மொழி நேபாளம்'' என்றார்.
இப்போது இதயம் முரளி படத்தில் அதர்வா முரளி உடன் நடித்து வருகிறார். ஜி.பி.பிரகாஷ் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். சுந்தர் சி இயக்க விஷால் நடிக்கும் படத்திலும் நடிக்கப் போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது. சிம்பு ஜோடியாக அவர் நடிக்க இருந்த படம் டிராப் ஆகிவிட்டது.