ரத்தம் தெறிக்கும் டிசி படத்தின் டிரைலர் | கருப்பு படத்தில் முதல்வர் விஜய்க்கு நன்றி கார்டு | பூஜா ஹெக்டேவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் படம் | முதல் நாளே 10 கோடி வசூலை தாண்டிய ‛அதிரடி' திரைப்படம் | துரந்தர் 2 : ஓயே ஓயே பாடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த 6 கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு |

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'பராசக்தி' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இதையடுத்து சிவகார்த்திகேயன், ‛டான்' பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
இதில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவை ஒப்பந்தம் செய்திருந்தனர். ஒரு சில காரணங்களால் இந்த படத்திலிருந்து ராஷ்மிகா விலகிவிட்டாராம். இதனால் நாயகியாக ஸ்ரீ லீலாவை சிவகார்த்திகேயன் பரிந்துரை செய்துள்ளார். இதனால் அவர் நடிக்கலாம் என தெரிகிறது.
சிவகார்த்திகேயனின் ‛பராசக்தி' படத்தில் ஸ்ரீ லீலாவும் இணைந்து நடித்து வருகிறார். இதற்கு அடுத்த படத்திலும் இருவரும் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.